செவ்வாய், 22 மே, 2012

ஐபிஎல்-லில் பெட்டிங் / ஃபிக்ஸிங் நிச்சயம் உள்ளது

IPL - கெய்ல் புயல் ஓய்ந்து சென்னையில் சகஜ நிலை குறித்தும் மற்றும் பிறவும் -எ.அ.பாலா

என்னமோ ஒண்ணுமே புரியலை, அதெப்படி 3 ஆட்டங்களும் (DD vs KXIP, DC vs RR, DC vs RCB) சென்னைக்கு சாதகமாக அமைந்தது என்று!!!! தில்லி பஞ்சாபை வென்றது பெரிய விஷயமில்லை என்றாலும் டெக்கான் ராஜஸ்தானையும் பலம் வாய்ந்த பெங்களூர் அணியையும் வீழ்த்தியதை நம்பவே முடியவில்லை. கெய்லும் கோலியும் டிவிலியர்சும் டெக்கானை நசுக்கியிருக்க வேண்டாமோ !?!? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்றெல்லாம் சொல்லி, டெயில் ஸ்டெயின் என்ற உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சாளரை சிறுமைப்படுத்த இஷடமில்லை! கெய்ல், தில்ஷன், கோலி என்ற திறமை மிக்க 3 மட்டையாளர்களுக்கு எதிராக அவரது அந்த பந்து வீச்சை (4-0-8-3) விவரிக்க வார்த்தைகள் இல்லை !
இந்த ஐபிஎல்-லில் 700+ ரன்கள் அடித்த கெய்லையும், கோலியையும் நினைத்தால் பாவமாக இருந்தாலும், ஆணாதிக்க திமிருடன், லூக் போமர்பேஷ் விஷயத்தில், புகார் கொடுத்த பெண்ணின் நடத்தை பற்றி டிவிட்டரில் அசிங்கமாக உளறியிருந்த, அவரது அப்பா மால்யா என்பது தவிர வேறெந்த பெரிய த்குதியும் இல்லாத சித்தார்த்த மால்யாவுக்கு இது தேவை தான் என்ற எண்ணம் என்னைப் போல் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்!

என் நண்பர்களில் சிலர், ஐபிஎல்-லில் பெட்டிங் / ஃபிக்ஸிங் நிச்சயம் உள்ளது என்பதற்கு பல க்ளோஸ்

ஆட்டங்களை உதாரணமாகக் கூறி வந்துள்ளனர்! இதற்கு சுவாரசியமான காரணங்கள் வேறு :) ஐபிஎல் திரைக்குப் பின் நடப்பவை அனைத்துமே குழப்பமாக இருப்பதால், என்னைப் போன்ற சராசரி “சென்னை” ஆட்களின் ஒரே interest சென்னை அணி எப்படியாவது செமியில் பூந்து விட வேண்டும் என்பது மட்டுமே! (அதற்கு யார் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை :)) அது நடந்தும் விட்டதால், இன்னும் 48 மணி நேரம் எந்த டென்ஷனும் இல்லை, சென்னை-மும்பை ஆட்டம் தொடங்கும் வரை!

ஆனால், பங்களூரில் இந்த ஆட்டம் நடக்கவிருப்பதால், பங்களூர் செய்த சொதப்பலால், கொல்லைப்புறம் வழியாக செமியில் நுழைந்த சென்னைக்கு, சின்னசாமியில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது என்று தோன்றுகிறது! காவிரித் தண்ணீரையே தர மாட்டேன் என்கிறார்கள்! ஐபிஎல் ஆட்டத்தில் சென்னைக்கு ஆதரவு தராவிட்டால் என்ன குடி முழுகி போய் விடப் போகிறது! அது போல, சுழற்பந்து வீச்சுக்கு அதிக ஆதரவு இல்லாத வகையில், புனேவிலும், சேப்பாக்கத்திலும் ஆடுகளங்கள் சற்றே சீர் செய்யப்பட்டால், கொல்கத்தா அணிக்கு unfair advantage கிடைக்காமல் போகும்!

மற்றும் பிற:

ஐபிஎல்-லில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்கள் (லூக், ஜுனியர் மால்யா, ஷாருக் லூட்டிகள்!) குறித்தும், BCCI-கார்ப்பரேட் கூட்டு சேர்ந்து கிரிக்கெட்டை ஒரு வழி பண்ணுவது பற்றியும், அதிக விலை டிக்கட்களை காரணம் காட்டியும், பொதுவாக கிரிக்கெட் மேல் உள்ள கடுப்பால் அறச்சீற்றம் கொள்வோரைக் கண்டு ரொம்ப பரிதாபமாக இருக்கிறது! (லாலு ஐபிஎல்-லை மூடிவிட வேண்டும் என்கிறார், இதென்ன மளிகைக்கடையா ;)) இவர்கள் அறச்சீற்றப்படுவதற்கு இந்த நாட்டில், ஐபிஎல்-லை விட மக்களை மிகுந்த இம்சைக்கு உள்ளாக்கும் பல விஷயங்கள் உள்ளன!

கருத்துகள் இல்லை: