புதன், 7 ஏப்ரல், 2010

அதாவது இலங்கைசிறி : லங்காசிறி என பெயரிடப்பட்டது. அவர் அன்று ஏன் ஈழம்சிறி என அவ்விணையத்திற்கு பெயரிடவில்லை

லங்காசிறியின் தமிழ்வின் இணையத்தளம் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் சிறிதரன் என்பவர் லங்காசிறி உரிமையாளர் சிறிகுகனின் சகோதரராவார். எனவே சிறிகுகன் (தமிழ்வின்) சிறிதரனுக்காக பிரச்சாரம் செய்கின்றார். எனவே இவ்விணையங்கள் தமிழ் மக்கள் மீது திணிக்கும் கருத்துக்களை மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். லங்காசிறி இணையத்தளம் முற்று முழுதாக வியாபார நோக்கம் கொண்டதோர் இணையமாகும். ஆனால் தமது வியாபாரத்தினை பெருக்குவதற்காக மிகவும் நச்சுத்தனமான பிரச்சாரங்களை அது மேற்கொண்டுவருவதையும் அப்பிரச்சாரங்களில் சுயநலன் இருப்பதையும் மேற்படி இத்தேர்தல் பிரச்சாரங்கள் எடுத்துக்கூறுகின்றது.

லங்காசிறி எனும் இணையம் எவ்வாறு பிரபல்யமானது? சிறிலங்கா எனும் பெயரை தலைகீழாக மாற்றி இணையம் ஒன்று இருக்கின்றது அதுவே லங்காசிறி என இளைஞர்களுக்கு கூறப்பட்டது. அப்பெயர் தமிழ் மக்களுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஆனால் அவ்விணையத்திற்கான பெயர் சிறிலங்காவை தலைகிழாக மாற்றி வைக்கப்படவில்லை என்பதையும், இணையத்தளத்தின் உரிமையாளர் சிறி, அவர் இலங்கையை சேர்ந்தவர். அதாவது இலங்கைசிறி : லங்காசிறி என பெயரிடப்பட்டது. அவர் அன்று ஏன் ஈழம்சிறி என அவ்விணையத்திற்கு பெயரிடவில்லை என்பதை மக்கள் சிந்தித்தால் இவர்களது தொலைநோக்கு புரியும்.

இன ஐக்கியத்தை வலியுறுத்தி அன்று இணையங்கள் செய்தி வெளியிட்டபோது அவை அரசாங்கத்தின் பொய்பிரச்சார ஊது குழல்கள் என தமிழ்வின் விமர்சித்தது. ஆனால் இன்று அரசாங்கத்தின் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் நிற்கும் ஊடகமாக லங்காசிறி திகழ்கின்றது.

மூவின மக்களின் அர்ப்பணிப்பாலேயே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது : இராணுவத்தளபதி யாழில் தெரிவிப்பு

தெல்லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்

உதாரணத்திற்கு மேற்படி இணைப்புக்களை வாசித்து மக்கள் இவ்விணையம் தொடர்பான நம்பகத்தன்மையை ஊகித்துக்கொள்ளலாம். இன்றைய இராணுவத் தளபதி தொடர்பான இலவச விழம்பரம் செய்கின்றது லங்காசிறி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக தமிழ்வின் மேற்கொள்ளும் பிரச்சாரம் வியாபாரநோக்கம் கொண்டதாகும். வன்னி மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் , தடுப்புக்காவல் முகாம்களிலும் முடங்கிக்கிடந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவின் அடுக்களையிலேயே கிடந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கிலிருந்து ஒருவர், கிழக்கிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் என 24 வடகிழக்கு பா.உ பாராளுமன்றில் இருந்தபோதும், வன்னி மக்கள் சார்பாகவும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள புலிகளில் குற்றமிளைக்காதோர் சார்பாகவும் தமிழ்வின் போன்ற இணையங்கள் இனவாதிகள் என மக்களுக்கு இனம் காட்டியிருந்த ஜேவிபி யினரே குரல் தொடுத்திருந்தனர். கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஜேவிபியின் பாராளுமன்ற குழுத் தலைவராக செயற்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார். அவர் அங்கு பேசுகையில் 11000 மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிர்வாழ்கின்றார்களா? என்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது. தனது குழந்தை உயிர்வாழ்கின்றதா இல்லையா என அறியும் உரிமை பெற்றோருக்கு உண்டு. ஆனால் அவ்வுரிமை அப்பெற்றோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர் விபரங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அரசை அவர் வேண்டியிருந்தார். (அவர் பாராளுமன்றில் பேசிய விடயம் தொடர்பான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, சிங்களத்தில் அவர் பேசும் விடயங்களை ஆர்வமுடையோர் தயவு செய்து மொழி பெயர்த்து கருத்துக்கள் பகுதியில் பதிவு செய்யவும்.)
 thanks
www.ilankainet.com

கருத்துகள் இல்லை: