வியாழன், 22 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருவர் குருசோ வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சற்றுமுன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துநர் ஒருவரும் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் முறையே 70 லட்சமும் 40 லட்சமும் கப்பமாக கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.குருசோ வீதியிலுள்ள வீடொன்றில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து மீட்ட பொலிஸார், 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, இருவர் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: