
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.'
இதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் உத்தரவை காரணம் காட்டி சட்டசபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், வெள்ளிக்கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை கமல்நாத் அரசு நிரூபிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.
இதனிடையே வியாழக்கிழமை நள்ளிரவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கமல்நாத் அறிவித்துள்ளார். இச்சந்திப்பில் நம்பிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக