ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

90 வீதமான ஆணுறை விற்பனை இயந்திரங்கள் திருடு போய்விட்டன !


நாடு முழுவதும் 90 சதவீத ஆணுறை எந்திரங்கள்
மாயமாகி விட்டதாகவும் பல
இடங்களில் எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறை பற்றியும் கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மீது குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ்சை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் ஆணுறைகள் வழங்கும் தனியாங்கி எந்திரங்கள் வைக்கப்பட்டன. விலை மாதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், பஸ் நிலையங்கள், கழிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த தானியங்கி எந்திரங்கள் வைக்கப்பட்டன. ஏழைகள் உடல் நலன் காக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் நிறுவப்பட்ட ஆணுறை வழங்கும் தானியங்கி எந்திரங்களில் 90 சதவீதம் எந்திரங்களை காணவில்லை என்று கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டி உள்ளது.

எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 11,025 எந்திரங்கள் வைக்கப்பட்டன. இவற்றில் 9,860 எந்திரங்களை காணவில்லை. அவை எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 1,130 எந்திரங்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவை செயல்பட முடியாத நிலையில் உள்ளது.
2–வது கட்டமாக நிறுவப்பட்டதில் 1546 எந்திரங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. 161 எந்திரங்கள் திருட்டு போய் விட்டது. 1791 எந்திரங்கள் நிறுவப்படாமல் உள்ளது. முதல் கட்டமாக 2005–லும், 2–வது கட்டமாக 2008–லும் நிறுவப்பட்டது.
இங்கு ஆணுறை விற்பனையும் மிகக் குறைவாக உள்ளது. எந்திரங்கள் நிறுவுவதற்கான செலவு தொகை ரூ.21.54 அதைக்கூட விற்பனை இலக்கு எட்டவில்லை என்று கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டிமாலைமுரசு.com

கருத்துகள் இல்லை: