செவ்வாய், 1 நவம்பர், 2011

காணிகளை அபகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது-பசில் ராஜபக்ஷ!

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது-பசில் ராஜபக்ஷ!

கேள்வி: அரசாங்கத்தின் “திவிநெகும” திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து இரண்டாவது கட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடபகுதி மக்களின் காணிகளைப் பதிவு செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு சிலர் எத்தனித்து வருகின்றமை தொடர்பாக நீங்கள் கூறும் கருத்தென்ன....?
பதில்: அரசாங்கம் என்ற வகையில் மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போயிருந்த பயங்கரமான மிகக் கொடூரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பாடுபட்டோம். அன்று நாம் மனித உரி மைகளை மீறுவதாக நமக்கெதிராக குற் றஞ்சுமத்தினர். இதேபோன்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள், வீதிகள் மற்றும் அவர் களது பொதுத் தேவைகளைச் செய்து கொடுக்கவில்லையென்றும் குறைகளைக் கூறினர். மீள்குடியேறிய மக்களுக்கும் எவ்வித செயற்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை யென்றும் புகார் செய்தனர். எனினும் இவ்வாறான அனைத்து குற்றங்களுக்கும், முறைப்பாடுகளுக்கும் நாம் செயற்பாடுகளின் மூலம் பதில ளித்துள்ளோம். இன்று வட, கிழக்கு வாழ் மக்களை குடியமர்த்தியுள் ளோம். எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. இவ்வாறு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் போது சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் ஏதாவதொரு பிரச்சினையைக் கிண்டிக் கிளறிக் கொண்டேயிருப்பார்கள். அத்துடன், தேவையற்ற ஏதாவதொன்றைப் பிடித்துக்கொண்டு மக்களுக்கு எங்களால் வழங்கப்படும் சேவைகளை நிறுத்தப்பார்க் கிறார்கள். எனவே இவ்வாறான காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்கு அவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனரே. இது தொடர்பில் நீங்கள் கூறவிரும்புவதென்ன?
பதில்: உண்மையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. அத்துடன் வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை. மக்களின் காணிகள் மக்களிடம் மீண்டும் செல்வதை உறுதிப்படுத்தவே காணிப்பதிவுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான விடயங்களைக் கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணிப் பதிவு நடவடிக்கைகளை எந்தவிதத்திலும் தப்பான விதத்தில் மேற்கொள்ள மாட்டோம். இதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதையும் திட்டவட்டமாக அரசாங்கம் சார்பில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கிழக்கை நாம் மீட்டபோதும் அப் பிரதேசங்களிலும் சிங்களக்குடியேற்றங்களை அரசாங்கம் செய்யப் போவதாகவும் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் வாகரையிலோ அல்லது வேறு எங்காவது பகுதியிலோ அரசாங்கம் சிங்களக் குடி யேற்றங்களைச் செய்யவில்லை. இதேபோன்று தான் தற்போது வடக்கிலும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளப் போவதாக பொய்ப்பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறன. ஆனால் அவ்வாறு சிங்களக் குடியேற்றங்களைச் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் பாரிய அபி விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மக் களின் காணி எது என்பதும், அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் எவை என்பதும் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு நாம் காணிகளை அடையாளம் காணாவிட்டால் எவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனவே, இவற்றைக் குழப்பும் வகையில் யாரும் இத்தருணத்தில் நடந்துகொள்ள வேண்டாம்.
கேள்வி: இன்று மரக்கறி பழவகைகள் விலை அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் செலவும் உயர்ந்து கொண்டே போகிறது. அரசாங்கத்திடம் முறையான செயற்றிட்டமொன்று இவைகள் தொடர்பில் இல்லை. இந்நிலையில், “திவிநெகும” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்து இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “திவிநெகும” முதலாவது கட்ட நடவடிக்கைக ளின் முன்னேற்றம் குறித்து சற்று கூற முடியுமா?
பதில்: அரசியல் மேடைகளில் அரசாங்கத்தைப் பற்றி விமர்சிக்கும் எண்ணங்களை எதிர்க் கட்சிகள் இன்னும் கைவிடவில்லை. இன்னும் இதுவரையிலும் அரசாங்கத்தை விமர்சித்தே வருகிறார்கள். “திவிநெகும” பயிர் நடும் திட்டத்தை நாம் ஆரம்பிக்க முன் மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலையேற்றத்தைப் பற்றி பேசாத எதிர்க் கட்சிகள், தற்போது தான் அதைப்பற்றிப் பேசுகிறார்கள். இதிலிருந்து நமது “திவிநெகும” பயிர் நடும் திட்டத்தின் முதலாவது கட்டம் மிகவும் முன்னேற்றகரமாக முடிந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஜனாதிபதியின் ஆலோச னைக்கமையவே “திவிநெகும” வேலைத்திட் டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம், தற்போது எவ்விதத் தடங்கலுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இது இவ்வாறிருக்க, எதிர்க்கட்சியினர் எம்மைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ, அல்லது நமது “திவிநெகும” திட்டத்தைப் பற்றியோ விமர்சனம் செய்வதில் எதுவித பயனு மில்லை.
கேள்வி: அரசாங்கம் வீட்டுத்தோட்ட திட்டங்களை மரக்கறி வகைகளினதும் பழவகைகளினதும் விலைகள் அதிகரித்துள்ள வேளைகளிலேயே மேற்கொள்கிறது. இத்திட்டத்திற்கு மிக நீண்டகாலம் செல்லும். அப்படியானால் இத்திட்டம் முடிவுறும் போது மரக்கறி வகைகளினதும், பழவகைகளினதும் விலை கணிசமான அளவு குறையும். இதிலிருந்து, மக்களின் அபிலாஷைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாரில்லை என சிலர் கருதும் இவ்வேளை யில், இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: அரசாங்கம் என்ற வகையில் எமக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது என்பது ஒரு கட்டுக்கதையும், விஷமப் பிரசாரமுமாகும். இப்படியே தான் எதிர்க் கட்சியினர் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு மணித்தியாலங்களை இருளில் கழிக்க வேண்டிய நிலை ஒரு காலத்தில் மக்களு க்கு இருந்தது. பாதைகளில் செல்ல முடி யாது குண்டும் குழியுமாக, கற்கள் கழன்று, பாதையில் தார் வெடித்து, மண் பாதைகளில் நீர் நிரம்பி வழிந்தோடிய காட்சிகள் நிறைந்த ஒரு யுகத்தை, சுகாதாரத்துறையில் பல்வேறு சீர்கேடுகள், மருந்தில்லை, நோயாளிக்கு வார்ட் இல்லை. வைத்தியம் செய்ய வைத்தியசாலைக் கட்டடங்கள் இல்லை. தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்ய வைத்திய உபகரணங்கள் இல்லை. இவ்வாறான இருள் நிறைந்த யுகத்தை மக்கள் அன்று அனுபவித்து வந்தனர். ஆனால், இன்று மக்களுக்குத் தேவையான மின்சாரம் கிராமங்கள் தோறும் தொடர் விநியோக சேவையாக எவ்விதத் தடங்கலுமில்லாமல் வழங்கப்படுகிறது.


சந்திப்பு: எஸ்.என்.எம். இப்றாஹீம்.

கருத்துகள் இல்லை: