புதன், 2 நவம்பர், 2011

Wikileaks ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட வேண்டும் : பிரிட்டன் நீதிமன்றம்!

பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாஞ்சே வழக்கறிஞர்கள் பிரிட்டனில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றுவது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று வாதிட்டனர்.
அசாஞ்சே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது நிறுவனமான விக்கிலீக்ஸ்-இல் பணிபுரியும் பெண்கள் இரண்டு பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: