திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தவ்லீன் சிங் : சிதம்பரம் நிதியமைச்சராக அதிகாரிகளால் வேட்டையாடப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்திருக்கலாம்

tamil.indianexpress.com -Tavleen Singh Writes: நான் ஆழ்ந்த ஆர்வத்தோடும் சிறிய
அனுதாபத்தோடும் தான் கடந்த வாரம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கவனித்தேன். அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சிறிய இராணுவம், ஒரு காலத்தில் தங்கள் முதலாளியாக இருந்த ஒரு நபர் மீது தங்கள் அதிகாரத்தை செலுத்துவதை நான் பார்த்தபோது, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது எனக்கு என்ன நேர்ந்தது என்ற நினைவுகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓடின.
என்னுடைய இந்தியாவின் உடைந்த முயற்சி என்ற புத்தகத்தில் இந்த கதையை முழுமையாக, கோரமாக விரிவாகச் சொல்லியிருக்கிறேன், ஆனால், அதில் ஒரு துல்லியம் அவசியம்.
நான் ஒரு நண்பரின் கடலோர வீட்டில் தங்கியிருந்தேன். அது ஒரு சனிக்கிழமை பிற்பகல். ஒரு ஆய்வில் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அரை தூக்கத்தில் டிவி முன்பு இருந்தபோது, ஒரு ஆண்கள் குழு (ஒரு குள்ளமான பெண்) வந்து, அவர்கள் ஒரே நேரத்தில் நான் கீழே இறங்க வேண்டும் என்று கத்தினார்கள். இந்திய அரசாங்கம் நாங்கள், இந்திய அரசாங்கத்தில் இருந்து வந்திருக்கிறோம். இது சோதனை என்று கூறினார்கள்.

நான் கீழே இறங்கி செல்லும் வழியில். தற்செயலாக குள்ளப் பெண்ணைத் தொட்டேன், நான் அவளைத் துன்புறுத்தியது போல் அவள் ‘என்னைத் தொடாதே’ என்று கத்தினாள். நான் கீழே இறங்கியபோது, சோதனை குழுவில் சுமார் 30 பேர் இருந்ததைக் கண்டேன். அவர்களின் முதல் நோக்கம் என்னை அச்சுறுத்துவதாகவே தோன்றியது.


அது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் என்னிடம் கத்தியபோது நான் திரும்பக் கத்தினேன். அது அவர்களை அமைதிப்படுத்தியது. ஆனால், அவர்கள் சோதனை செய்யும் வீடு எனக்கு சொந்தமானது அல்ல என்ற எனது ஆர்ப்பாட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் எனது தனிப்பட்ட விஷயங்களுக்குச் சென்று, என்னிடம் இருந்த ஒவ்வொரு சிறிய நகைகளையும் மதிப்பீடு செய்தனர். அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அவர்கள் தேடிவந்தபோது இருந்த மூர்க்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால், அது சற்று மட்டுமேதான் குறைந்திருந்தது. ஒருவரை நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரைக்கும் ஒரு குற்றவாளியை அவர்கள் எப்படி நடத்துவார்களோ அப்படி அவர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தது.

அந்த ஆண்கள் எல்லாம் அமலாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள்.
எனக்கு என்ன நடந்ததோ அது ஆயிரக்கணக்கான சாதாரண இந்தியர்களுக்கு தொடர்ந்து நடக்கிறது. ஒரு தொழிலை நடத்த முயற்சிக்கும் எவரும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பொருளாதார குற்றங்களை கையாளும் அதிகாரிகளின் தயவில் தொடர்ந்து இருக்கிறார்கள். குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் என்று கருதப்படுகிறார்கள், ஆனால் பொருளாதார குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்கள் விவகாரத்தில், நீதிக்கான இந்த அடிப்படைக் கொள்கை பொதுவாக தலைகீழாக மாற்றப்படுகிறது.

சிதம்பரம் கைது செய்யப்பட்டதை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிருபர்களின் படை அங்கே தற்செயலாக இருந்தது என்று நினைக்கும் எவரும் மீண்டும் சிந்திக்க வேண்டும். தொலைக்காட்சி நேரலைகள், அதிகாரிகளின் 15 நிமிட புகழைப் பயன்படுத்திக்கொள்ள தைரியம் அளித்துள்ளது. எனவே ‘பிரபல குற்றவாளிகளின்’ ஊடக ஒளிபரப்பு இப்போது வழக்கமாகி உள்ளன.
அரசியல் தலைவர்கள் தாங்கள் கவனமாக உருவாக்கி வளர்த்த அநியாயமான அமைப்புக்கு அவர்களே பலியாகும்போது ஒரு அனுதாபத்தை உணரக்கூட சிரமமாக இருக்கிறது.

நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் ஒரு காலத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைச்சராக இருந்த ஒருவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் இருந்தால், அவர்களை நிறுத்தி பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாளை அது அவர்களின் முறை. மேலும், மறுநாள் அது உங்களுடையதாகவும் இருக்கலாம். நமது விசாரணை முகமை நிறுவனங்களுக்கு பழமையான விசாரணை முறைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமம் உள்ளது. சாதாரண வரி ஆய்வாளர்களுக்கு இன்று ‘கறுப்புப் பணம்’ உள்ளவர்களைக் கைது செய்ய அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தில் மிகவும் ஊழல்வாதிகள் மத்தியில் அல்லது கறுப்புப் பணத்தை விதைக்கலாம் என்பதையும் ஒரு பொய்வழக்கை போடலாம் என்பதையும் இந்த சட்டத்தை உருவாக்கிய் ஆண்கள் தெளிவாக கவனிக்கவில்லை.

கடந்த வாரம் சிதம்பரம் பொதுவில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட விதம் தவறானது. அப்போது அதிகாரிகள் போலியாக சுவர் ஏறி குதித்து காட்ட வேண்டியதற்கு எந்த காரணமும் இல்லை. இந்திய அரசாங்கத்தில் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்படும் எல்லா விவரத்தையும் தொலைக்காட்சி நிருபர்கள் கவர் செய்வதற்கும், ஊடகங்கள் அதை தெரிவிப்பதற்கும் எந்த காரணமும் இல்லை. ஆனாலும், ப.சிதம்பரம் மீது அனுதாபம் கொள்வது சிரமம் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவர் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த பல ஆண்டுகளில், அமலாக்க இயக்குநரகம் போன்ற நிறுவனங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த ஒருபோதும் முயற்சித்ததில்லை.
அவர்கள் பயன்படுத்தும் முறைகள் மிகவும் காட்டுமிராண்டித்தனமானவை. ஒரு முறை ஒரு இளம் தொழிலதிபர் ஒருவர், அவர்களுடைய காவல் விசாரணையில் ஒரு இரவு துண்புறுவதைவிட மேலானது என்று லோக் நாயக் பவன் ஜன்னலில் இருந்து குதித்தார். டாக்டர் மன்மோகன் சிங் அப்போது நிதி அமைச்சராக இருந்தார். இந்த துயரமான தற்கொலை குறித்து அவரது கவனத்தை ஈர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அதனால், அவர் திகிலடைந்ததாகவும் அதைப் பற்றி ஏதாவது செய்வதாகவும் அவர் கூறினார். ஆனால், இது 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது ஒன்றும் மாறவில்லை

ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு இயக்க உரை நிகழ்த்தினார். அதில் அவர், ‘ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரம் என்று நான் நம்புகிறேன். இந்திய அரசியலமைப்பின் மிக அருமையான சரத்து வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பிரிவு 21 ஆகும். வாழ்க்கைக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் தேர்வு செய்யும்படி என்னிடம் கேட்கப்பட்டால், நான் சுதந்திரமாக சுதந்திரத்தைத் தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார்.
அவர் நிதியமைச்சராக இருந்தபோது இதை நினைவில் வைத்திருந்தால், பொருளாதார குற்றப்பிரிவில் தனது அதிகாரிகளால் வேட்டையாடப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க அவர் நிறைய செய்திருக்கலாம். அரசியல் தலைவர்கள் தாங்கள் உருவாக்கிய அமைப்புக்கு பலியாகும்போது அவர்களுக்கு அனுதாபம் கொள்வது சிரமம்

கருத்துகள் இல்லை: