

நீண்ட இடைவெளிக்கு பின், காலில் விழும் கலாசாரம், அக்கட்சியில், மீண்டும் துவங்கி உள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பினார். அவரை வழியனுப்புதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்துடன் திரண்டனர்.அனைவரும் வரிசையாக நின்று, முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள், ரமணா, மூர்த்தி, சண்முகநாதன், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரும் வரிசையாக, முதல்வர் காலை தொட்டு வணங்கினர்; முதல்வரும் தடுக்கவில்லை. ஜெயலலிதாவை சந்திக்கும்போது, பயபக்தியுடன் பணிந்து, பூங்கொத்து வழங்குவது போல், அமைச்சர்கள், நேற்று முதல்வரிடம் பூங்கொத்து கொடுத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக