வெள்ளி, 20 ஜூலை, 2018

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு .. பேசுவதற்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட நிமிட அளவுகள் ,,

தினத்தந்தி : புதுடெல்லி, மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
மக்களவையில் விவாதம் நடைபெற்று, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. மக்களவையில் விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி 33 நிமிடங்களும்,
 காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும்,
திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும்,
பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும்,
சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள், லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். என மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: