வெள்ளி, 8 மே, 2020

மும்பை . தண்டவாளத்தில் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் மீது ரயில் மோதி மரணம்

Arunkumar Veerappan : · மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதால் 17 பேர் உயிரிழப்பு- செய்தி. கண்டிப்பா அவங்க தூங்கிட்டு இருந்திருக்க மாட்டாங்க.
எங்கயும் போக வக்கில்லாம வழியில்லாம செத்து போயிடலாம்னு முடிவெடுத்து தான் படுத்துருப்பாங்க. பல மாநிலங்களில் பல இளைஞர்கள் தொழிலுக்காக சென்றவர்கள் மாட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வருவதற்கு வேறு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்தாமல் தொடர்ச்சியாக ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் இது போன்ற உயிரிழப்புகள் அதிகரிக்கும். தற்போது வேலையும் இன்றி கையில் காசும் இன்றி உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் தவித்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என கணக்கே சொல்லி விட முடியாத அளவிற்கு இருக்கிறது.
அவர்களுக்காக எதுவும் செய்வதே இல்லை. பார்ப்போம் இன்னும் இதுபோன்ற எவ்வளவு சம்பவங்களுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பார்கள் என பார்ப்போம்.

மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
மும்பை: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவுரங்காபாத்-நாந்தேட் ரெயில் பாதையில ரெயில் தண்டவாளத்தில் படுத்து இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது காலியான சரக்கு ரெயில் மோதியது
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரெயில் பாதையில் மத்திய பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரவில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாலை அந்த பாதையில் ஓடிய சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதி உள்ளது "அவுரங்காபாத்தின் கர்மத் அருகே ஒரு விபத்து நடந்தது. நிலைமையை உறுதிப்படுத்த ஆர்.பி.எஃப் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளன

தென் மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) ) கூறினார்

கருத்துகள் இல்லை: