சனி, 9 மே, 2020

18 வயது இளைஞரின் நிறுவனத்தில் இணைந்த ரத்தன் டாட்டா

18 வயது இளைஞரின் நிறுவனத்தில் இணைந்த  ரத்தன் டாட்டாமின்னம்பலம : 18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த அர்ஜுன் தேஷ்பாண்டே என்ற 18 வயது இளைஞர் பார்மா பிசினஸ் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இவர் தயாரிக்கும் ஜெனரிக் மருந்துகளை மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்யாமல் நேரடியாக சில்லறை விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்தார்.

மும்பை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை கடைகளுக்கு நேரடியாக இந்நிறுவனத்தின் மருந்துகள் 16 முதல் 20 சதவிகிதம் மட்டுமே லாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லறை கடைக்காரர்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன.
இந்த இளைஞரின் தொழில் திறமை குறித்து கேள்விப்பட்ட பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா இந்த நிறுவனத்தில் 50 சதவிகிதம் முதலீடு செய்துள்ளார். மேலும், இந்த முதலீடு டாடா குழுமத்தில் இருந்து முதலீடு செய்யவில்லை என்பதும் டாடா தனது சொந்தப் பணத்தில் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத் உட்பட பல மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் தொடங்கவும் அர்ஜூன் தேஷ்பாண்டே திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: