சனி, 9 மே, 2020

நேற்று மட்டும் குடியால் நிகழ்ந்த அவலங்கள் .. சீரழியும் தமிழகம்

Subashini Thf : சீரழிந்த சமூகம்
இன்று காலை News24 செய்தி
*நேற்று மட்டும் குடியால் நடந்த நிகழ்வு, தமிழகம் எங்கும்...*_
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் மது போதையில் 4 இளைஞர்கள் மோதல். ஒருவருக்கு கத்திக் குத்து.
மதுரை அழங்காநல்லூரில் கணவர் குடித்துவிட்டு அடித்ததாள் மனைவி மற்றும் மகள் தற்கொலை
திருச்சூழி அருகே மது போதையில் தங்கையை அண்ணனே கட்டையால் தாக்கி கொலை.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள் புரத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேரை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அய்யா கோவில் தெரு ராஜமணி என்பவருடைய மனைவி ஜெயமணி என்பவரை அவருடைய மகன் ராஜன் என்பவர் மது போதையில் வீட்டை தனக்கு எழுதித் தரவில்லை என்று தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே மோதல். இருவரின் மண்டை உடைப்பு.
திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு! காவல்துறை விசாரணை
காரைக்குடியில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அருவாளால் வெட்டிய அண்ணன்!
குமரியில் இரு மதுபான கடைகளுக்கு தீ வைப்பு: பல லட்சம் மதுபாட்டில்கள் எரிந்து சேதம்
திறந்தால் அடித்து நொறுக்குவோம்...! ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள்

கருத்துகள் இல்லை: