சனி, 16 பிப்ரவரி, 2013

விமான பணிப் பெண்ணின் கீதா சர்மாவின் தாயும் தற்கொலை Ex அமைச்சர் கோபால் கண்டாபிளாக் மெயில்

புதுடெல்லி: அரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றி  தற்கொலை செய்து கொண்ட முன்னாள் விமான பணிப் பெண் கீதா சர்மாவின் தாயும் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.அரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப் பணிப் பெண் கீதிகா சர்மா(22) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கீதிகா சர்மா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கீதிகா சர்மாவை, கோபால் கண்டா பிளாக் மெயில் செய்ததாக, கீதிகாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.இந்த வழக்கில் கோபால் கண்டா சிறையில் உள்ளார். இந்நிலையில் கீதிகா சர்மாவின் தாய் அனுராதா மேற்கு டெல்லியில் உள்ள வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கீதிகா இறந்து 7 மாதம் கழித்து அதே வீட்டில் அவரது தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: