ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

கைகழுவினார் மணிரத்னம்! “கடலா? எந்தக் கடல்?”



ஆற்றில் இட்ட பொன்னை குளத்தில் எடுத்ததாக புராணக் கதை உண்டு. கடலில் இட்ட பணத்தை எங்கே எடுப்பது?

ஆற்றில் இட்ட பொன்னை குளத்தில் எடுத்ததாக புராணக் கதை உண்டு. கடலில் இட்ட பணத்தை எங்கே எடுப்பது?
மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ், கடல் படத்தின் வியாபாரத்துக்கும் தமக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்து விட்டது. இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கை:
“Madras Talkies had sold their film ‘Kadal’ (both Tamil and dubbed Telugu version) to Gemini Industries and Imaging Ltd in March 2012 itself on MG (Minimum Guarantee) basis. Madras Talkies has had no other dealing with anyone else for the distribution of their film, nor has been party to any contracts Gemini might have entered into in this regard.”
அதன்படி, “கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை” என்று கைகழுவி விட்டார் மணிரத்னம்.
படுதோல்வி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், அடுத்து என்ன செய்வது என கூடிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: