வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குஷ்பு, “இவர்கள் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுதலாமே!”

viruvirupu  மிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று சற்று நேரத்துக்கு முன், ட்விட்டரில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார். “இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?” என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.
குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானதும், அதன் தொடர்ச்சியாய் குஷ்புவின் மீது தி.மு.க.வின் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. தி.மு.க. தலைமை ஒரு அறிக்கையை விட்டு அந்த விஷயத்தை அமைதிப்படுத்தியது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார்.
ஆனாலும் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில மீடியாக்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் முடியவில்லை. இன்று அது விஸ்வரூபம் எடுத்துள்ளது!
“அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்” என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமான வார்த்தைகளில் குறிப்பிட்டவை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவை.
“இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்’ பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா?” என்று விளாசியிருக்கிறார்.
இதோ, அவர் இன்று சற்று நேரத்துக்குமுன் எப்படி ரியாக்ட் செய்துள்ளார் என்று பாருங்கள்:
Tch tch tch..poor guy! I knw it hurts wen ur male ego is hit hard..shows in wat followed..u r the finest example of bng an educated idiot.
Being quite does not mean u r out n down.. it means the calm before the storm.. reporters who write stinking filth,be ready to face the music!
Wonder if these spineless men will ever have the balls to write about women of their family who literally do “business” n they r aware of it.
These ppl r nothing less than pimps who make money by selling a woman’s name n her dignity..but wen they can sell their women, this isn’t new…
எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும். எங்களால் ஊகிக்க முடியும். ஆனால், இதற்கான பதில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வரும்போது, ஊருக்கே தெரியவரும்.

கருத்துகள் இல்லை: