இக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பெட்ரோல் விலைகுறைப்பு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பாரகன்ஸ் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து முதன் முதலாக நாங்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நான் வீதியில் இறங்கி போராடியது போன்று வேறு முதலமைச்சர்கள் யாருக்கும் எதிர்க்க தைரியம் உள்ளதா? பெட்ரோல் விலையை முழுமையாக குறைக்க டில்லியில் போராடவும் நான் தயாராக உள்ளேன்.` என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக