புதன், 13 மார்ச், 2013

சோஹ்னா: மனிதர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும்

தமிழ், தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பவர் சோஹ்னா. இவர் கன்னடத்தில் ‘சவல் என்ற படத்தில் ராஜ்வால் தேவராஜ் ஜோடியாக  நடிக்கிறார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு மது பாரில் குரூப் டான்ஸராக இருந்தவர் என்று அந்த ஓட்டல் அதிபர் கூறியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ‘என்னுடைய ஓட்டலின் பின்புற சுவற்றில் ஒரு படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த சோஹ்னாவின் போட்டோவை பார்த்து ஷாக் ஆனேன். சோஹ்னா என்னுடைய ஓட்டலில் உள்ள மது பாரில் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவர். இந்த குரூப் எம்ஜி ரோட் பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் மாறி மாறி நடனம் ஆடுபவர்கள் என்றார் ஓட்டல் உரிமையாளர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சோஹ்னா. அவர் கூறும்போது ‘அந்த நபர் சொல்வதில் உண்மை இல்லை. அப்படி பாரில் நடனம் ஆடியதற்கான ஆதாரம் எதையாவது அவர் காட்டினால் சினிமாவை விட்டே நான் போய்விடுகிறேன். என் மீது பொறாமை கொண்டவர்கள் எனது இமேஜ் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோல் புரளி கிளப்புகிறார்கள். இது எனக்கு சோதனை காலம். இதுபோன்ற புரளியால் நான் வெறுப்பு அடைய மாட்டேன். பெண்களை இழிவு படுத்தும் இதுபோன்ற மனிதர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: