புதன், 13 மார்ச், 2013

இந்தியா வரமுடியாது, நாம் இங்கே மகிழ்ச்சியாய் உள்ளோம்!” -இத்தாலிய கடற்படை வீரர்கள்

ரொம்ப.. ரொம்ப மகிழ்ச்சிங்க!
viruvirupu

ரொம்ப.. ரொம்ப மகிழ்ச்சிங்க!
கடந்த வருடம் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்போது இத்தாலியில் உள்ள கடற்படை வீரர்கள் இருவரும், “நாம் இத்தாலியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொலைக் குற்ற விசாரணை குற்றவாளிகளான அவர்களை, உடனே திரும்ப அனுப்பி வைக்க இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
அவர்களை விசாரணைக்காக இந்தியா அனுப்ப முடியாது என்று இத்தாலி மீண்டும் உறுதியாக கூறியுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது, மஸிமிலானோ, சால்வடோர் ஆகிய இந்த இருவரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு மீனவர்கள் பலியாகினர். இரு இத்தாலியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவர்கள் இருவரும் தங்கள் நாட்டில் நடைபெறும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டி, இத்தாலி அரசின் உத்தரவாதப்படி உச்ச நீதிமன்ற ஜாமீனில் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் பன்னாட்டு கடல் எல்லையில் நடந்த இந்த சம்பவத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் தான் விசாரணை நடைபெறவேண்டும் என்று இத்தாலி கூறி, இவர்களை மீண்டும் இந்தியா அனுப்ப முடியாது என்று சொல்கிறது.
இந்த இருவரும் Italia-1 டி.வி. சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் இருவரும் சிறிதுகாலம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். இத்தாலிய கடற்படை வீரர்கள் என்ற முறையில் நாட்டுக்கான எங்கள் பணியை திரும்ப செய்ய இங்கு வந்துவிட்டோம். தாய்நாட்டில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்தனர்.
இத்தாலி அரசின் உத்தரவாதப்படி இவர்களை அங்கு அனுப்பி வைத்த மத்திய அரசு, மகிழ்ச்சியாக இல்லை!

கருத்துகள் இல்லை: