ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

2 ஜி ஸ்பெக்ட்ரம் - நாட்டிற்கே அவமானம் என்றனர்!காங்கிரசும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது!

May be an image of text that says ''Spectrum will boost Jio, Bharti's market share' "Telcos significantly widened footprint'

  A Raja ...:   2007ல் திருச்சூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்த பொழுது...
அருகில் அமர்ந்திருந்த ஒரு பார்ப்பணர், இந்த ராசாவுக்கு Spectrumன்னா என்னான்னு தெரியுமா!!!?? கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமா வச்சிக்கிட்டிருக்கானுவ என்று பேசிக்கொண்டு வந்தார்!
உண்மையிலேயே அப்பொழுது, எனக்கு Spectrum என்றால் என்னவென்று தெரியாது!
ஜெர்மனி நிறுவனத்தில் RSMஆக (South India) பணியில் இருந்த பொழுது எனது சம்பளம் Gross 5.5 Lakh/ Per Annum.
எனது கையில் ரூ. 10,000 மதிப்புள்ள Motorazer phone!
2006 ஜனவரியில் Nokia 1100 வைத்திருந்த என்னை எனது Manager திட்டியதால் Motorazer வாங்கிவிட்டேன்!
அன்று Samsung, LG வைத்திருந்தால் அவமானம் அல்லது ஏழை!
BlackBerry வைத்திருந்தால்... சமூகம் பெரிய இடம்!
ஒட்டு மொத்த Mobile Density 10 கோடி என்று எண்ணுகிறேன்.
WhatsApp, Facebook எல்லாம் இல்லை!

Photo எடுத்து MMS மூலமாக அனுப்பலாம்! Video எடுக்கலாம் அனுப்ப முடியாது!
இப்படிப்பட்ட சூழலில்தான் 2G ஏலம் விடப்பட்டது!
1 ரூபாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, Roaming charge குறைந்தது!
Nokia, Samsung போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்கின. சீன இறக்குமதி அதிகரித்தது!
இதற்கு பிறகு 500 - 2000 ரூபாய்க்கு Mobile Handset கிடைத்தது, எல்லோர் கையிலும் Mobile phone வந்தது!
ஒரு படத்தில் மணிவண்ணன்...
ச்செய் பால்காரன், பூக்காரி, காய்கறி கடை காறன், சைக்கிளில் போறவன் எல்லாம் Mobile phone வச்சிருந்தா நமக்கு என்ன மரியாதை, எதுக்கு இந்த கருமம் என்று தூக்கி வீசுவார்!
அதாவது வளங்கள் மற்றும் அதிகாரங்கள் எல்லாம் எங்களுக்கு மட்டுமே சொந்தம், யாரும் உரிமை கொண்டாட கூடாது என்ற எண்ணம் அது!
திமுக என்றாலே சமூக நீதி, சமத்துவம், வளங்களெல்லாம் எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும், பரந்துபட்ட வளர்ச்சி என்று பிழைக்க தெரியாத கட்சியாச்சே!
2007ல் நிறைய ஸ்பெக்ட்ரங்களை வெளியில் எடுத்து விட்டார், விபரமில்லா ஆ. ராசா!
2010ல் Mobile Density 30 கோடியாக உயர்ந்தது என்று எண்ணுகிறேன்!
அப்பொழுதுதான் BSNL Employee Union Leader குருமூர்த்தி, 2G ஏலம் விடப்பட்டதால் அரசுக்கு 38,000 கோடி இழப்பு என்றார்!!
உடனே நமது இந்திய திருநாட்டின் மீட்பர் வினோத் (ராய்) என்ற பார்ப்பணர்....
அய்யய்யோஓஓஓஓஓஓஓஓ....
2G ஏலத்தால் நாட்டிற்கு 1,76,000 கோடி இழப்பு என்று ஓலம் விட்டான்!
நமது நட்ட நடுநிலை பத்திரிகைகள்...
அய்யய்யோஓஓஓஓஓஓஓஓ ஆ.ராசா 1,76,000 கோடி கொள்ளையடித்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் பதுக்கி விட்டார் என்று தேஷ நலம் பாடினார்கள்!
திமுகவால் நாட்டிற்கே அவமானம் என்று ஒப்பாரி வைத்தனர்!
காங்கிரஸ் கட்சியும் அந்த குள்ள நரி கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது!
அந்த அவமானம் தாங்காமல், சென்னை வரும்  திரு. ராகுல் கலைஞரை பார்க்காமல் சென்று விடுவார்!
தினம் தினம் ஊடகங்களில் 2G, பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது!
அதற்கு பிறகு அரங்கேறிய நாடகங்கள் உலகம் அறிந்தது!
ஆனால் பாருங்கள்...
இன்று எல்லோருடைய கைகளிலும் Android phone உள்ளது,
1GB முதல் 100GB Internet Data இலவசமாக கிடைக்கிறது!
Mobile Density கண்டிப்பாக 100 கோடி இருக்கும்!
ஆனால் 4G அலைக்கற்றை ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா...
Rs. 77,814 கோடி மட்டுமே!!!
மக்களே சிந்தியுங்கள்...
ஊழல் என்பார்கள், வளர்ச்சி என்பார்கள், மாற்றம் என்பார்கள்...
இந்த புராணங்கள் எல்லாம்...
வளங்களும், அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட கும்பலிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற கூட்டம்!

கருத்துகள் இல்லை: