ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ரிஷி கபூரும் பதினைந்து வயது தென்னிந்திய நடிகையும்

இந்தி நடிகர் ரிஷி கபூர் (4 September 1952 — 30 April 2020).
இந்தி படவுலகை ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த கபூர் குடும்பத்தின் அன்றய வாரிசு நடிகர்  
தமிழ்நாட்டின் பழம் பெரும் திரைப்பட நிறுவனம் ஒன்று இவரை வைத்தது ஒரு இந்திப்படம் தயாரிக்க முடிவு செய்தது  (ஜெமினியோ விஜயா வாஹினியோ அல்ல)
இந்நிறுவன மானேஜர்  ரிஷிகபூரின் தந்தை  ராஜ்கபூரிடம் இது பற்றி கேட்டபோது அவர் சம்மதம் தெரிவித்து விட்டு மீதி  விடயங்களை ரிஷியிடம் பேசிக்கொள்ளுங்க என்று கூறினார்
அக் கம்பனி  மானேஜர் ரிஷிகபூரிடம் எல்லா விடயங்களையும் பேசி கதாநாயகியாக ஒரு தென்னிந்திய நடிகையின் பெயரை கூறினார்
அதற்கு ரிஷி கபூர் சம்மதிக்கவில்லை
மாறாக வேறு ஒரு இந்தி நடிகையின் பெயரை சிபாரிசு செய்தார்  
மனேஜரோ எமது நடிகை மிக நன்றாக நடிப்பார் அழகானவர் என்றெல்லாம் கூறிப்பார்த்தார்  
அதற்கு ரிஷிகபூர், அந்த நடிகையை தான் சென்னைக்கு வந்து நேரில் பார்த்து ஒரு இரண்டு மணித்தியாலங்கள் தனிமையில் பேசிய பின்பு முடிவு செய்வதாக கூறினார்
இதற்கு அந்த பெரிய பட நிறுவனமும் சம்மதித்தது
பின்பு சென்னையில் அவருக்காக ஒரு  எக்ஸ்பென்சிவ் நட்சத்திர  ஓட்டலில் ரூம் போட்டனர்
அது மட்டுமல்லாமல் அந்த நடிகரின் வேண்டுகோளின் படி நடிகையை தனிமையில் சந்திப்பதற்கு வேறு ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்னொரு எக்ஸ்பென்சிவ் ரூம் போட்டனர்
அந்த நடிகையோ எக்கச்சக்கமாக பயந்தார் அவரின் வயது வெறும் பதினைந்து தான்.
ஒருவாறு அவரை சமாதானப்படுத்திய படநிறுவனம் ஒன்றும் நடக்காது நாங்கள் ஓட்டல் அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கிறோம் பயப்படாமல் செல்லுங்கள்  
 கிடைக்க இருப்பது மிகப்பெரிய இந்தி படவாய்ப்பு  ஒன்றுக்கும் யோசிக்காமல் பயன்படுத்துங்க என்றெல்லாம் கூறி ஓட்டல் அறைக்குள் அனுப்பினார்கள்
நடுங்கி கொண்டே நடிகை உள்ளே சென்றார்
இரு மணித்தியாலங்களுக்கு பின்பு வெளியே வந்த நடிகர் சத்தம் போடாமல் காரில் ஏறி சென்றுவிட்டார்
பின்பு அந்த நடிகையோடு நடிக்க முடியாது என்று மறுத்தும் விட்டு பம்பாய்க்கு பறந்து சென்று விட்டார்
பம்பாயில் இருந்த கம்பனியின் மானேஜர் நடிகரிடம் சென்று கொடுத்த ஐம்பதினாயிரம் ரூபாயை திருப்பி தருமாறு கேட்டார்
நடிகரோ படத்தின் கதையும் கேட்டிருக்கிறேன்  சென்னைக்கு வேறு வந்தேன் .. கணக்கு சரியாகி விட்டது என்று கையை கழுவி விட்டார்
அதாவது அந்த பதினைந்து வயது சிறுமியின் / நடிகையின் கெமிஸ்ட்ரி பயோலொஜி எல்லாம் இரண்டு மணித்தியாலங்கள் தனி அறையில்  ..... அதற்கு வேறு ஐம்பதினாயிரம் ரூபாயை வேறு வசூலித்து விட்டு சென்றுவிட்டான் அவன்
ஐம்பதினாயிரம் ரூபாய் அவனிடம் கொடுத்தாகி விட்டதே என்று எவ்வளவு தூரத்திற்கு அந்த பெரிய நிறுவனம் தரம் தாழ்ந்து போயிருக்கிறது?
தனிப்பட்ட ரீதியில் அந்த  தயாரிப்பாளர்கள்  ஒழுக்கமானவர்கள் என்றுதான் கூறுகிறார்கள்
அந்த 1974 நாலுகளில் ஐம்பதினாயிரம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதை நீங்களே கணித்து கொள்ளுங்கள்
இந்தி சினிமா என்பது ஒரு நிறவெறியும்  ஆரிய ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட மாபியா கூட்டமாகத்தான் இருந்திருக்கிறது .. இருக்கிறது

கருத்துகள் இல்லை: