வெள்ளி, 22 ஏப்ரல், 2022

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியை பாகிஸ்தான் உளவு அமைப்பு கடத்தியது

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்.. உளவு அமைப்பு கடத்தியதா? #WorldUpdates

கலைஞர் செய்திகள்   : பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்.. உளவு அமைப்பு கடத்தியதா? #WorldUpdates
பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து இந்தியாவில் செயல்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறும்போது, “பாகிஸ்தானில் பணிபுரிந்த குலாப் சிங் ஷாஹீன் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஷாஹீன் எங்கு உள்ளார் என்பது குறித்து உடனடியாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: