சனி, 6 மார்ச், 2021

டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?

டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

உண்மையில்,   “*பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது என்பது நிதிமூலதனத்தின் ஆகப் படுமோசமான பிற்போக்கான ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்*” என்கிறார் பாசிசத்தை வெற்றிகொண்ட டிமிட்ரோவ்

பாசிசம் என்பது என்ன?

டிமிட்ரோவ் விளக்குகிறார் “*பாஸிஸம் நிதி மூலதனம் தன்னின் அதிகாரமாகும். அது தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரத்தன்மை கொண்ட விவசாயிகள் படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறை மிக்க பழிதீர்க்கும் ஸ்தாபனமாகும். வெளிநாட்டுக் கொள்கையில் பாஸிஸம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும் இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பை தூண்டிவிட்டு தூபம் போடுவதுமான சக்தியாகும்.*”.

1920-ல் இத்தாலியில் முசோலினியால் முதன்முதலில் பாசிசம் அரங்கேற்றப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை போல இத்தாலியிலும் மற்றும் பாசிசத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முசோலினியின் அந்தக் கால பாசிசம் இன்று டிஜிட்டல் பாசிசமாக உருமாறியிருக்கிறது.

டிஜிட்டல் பாசிசம் : பெரிமோ லெவி

பெரிமோ லெவி இவர் உலகிலுள்ள பாசிசத்தில் நிபுணத்தவம் பெற்றவர்களில் ஒருவர். இத்தாலியின் யுத ரசாயனவியலறிஞர் ஹோலோகாஸட். இவருக்கு ஜெர்மனியின் நாஜிசம் இத்தாலியின் பாசிசம் ஆகியவற்றில் முதல்நிலை அனுபவம் இருப்பதோடு அவை எவ்வாறு உள்ளிருந்து வேலை செய்யும் என்பதையும் கண்கூடாக பார்த்து அறிந்தவர். அந்த நடைமுறையை சிறந்த நுட்பத்தோடு விளக்குகிறார். பாசிசத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையை மனிதாபிமான பார்வையில் விளக்குகிறார்.

பெரிமோ லெவி கூறியவற்றுள் முக்கியமான நிகழ்காலத்திற்கும் பொருந்தக்கூடிய செய்தியென்றால் அது ஒவ்வொரு காலமும் அதற்கேயுரிய பாசிசத்தன்மையை பெற்றிருக்கும் என்பதுதான். *பாஸிஸத்தின் வளர்ச்சியும் பாஸிஸ சர்வாதிகாரமும் பலவேறு நாடுகளில் பல்வேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன.அந்தந்த நாட்டு வரலாறு சமுதாயம் பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்கு தக்கபடி தேசிய தனித்தன்மைகளுக்கும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தை பொறுத்தும் பாஸிஸம் உருவமெடுக்கிறது.*

பாசிசத்தின் இரு வடிவங்கள் :

1920 மற்றும் 1930-களில் இத்தாலியில் பாஸிஸமாகவும் 1930 மற்றும் 1940-களில் ஜெர்மனியில் நாஜிஸமாகவும் இரு தன்மைகளில் பாசிசம் இருந்த்து.

நாஜிசம்-பாசிசத்தின் மோசமான வடிவம்

டிமிட்ரோவ் விளக்குவதை போல “*ஜெர்மன் வகை பாசிசம் மிகவும் படு மோசமான பிற்போக்கான பாசிச வகையாகும். அது தன்னை தேசிய சோசலிசம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் ஆணவத்துடன் கூறிக்கொள்கிறது. ஹிட்லர் பாசிசம் பூர்ஷுவா தேசியவாதம் மட்டுமல்ல அது கீழ்த்தரமான இனவெறி மிக்கதாகும். அது மத்திய காலத்து காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது*”.

100 ஆண்டுகள் கடந்தபின்னும் இப்போது இணையத்தள வலைத்தள காலத்தில் அதன் வழியாகவும் பாசிசம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது என்று சொன்னால் அதன் அபாயத்தன்மையை மக்களுக்கு விளக்கி எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பாசிச போக்குகளும் ஒரு பாசிச இயக்கத்தின் விஷக்கிருமிகளும் அநேகமாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அக்கால பாசிச சிந்தனையின் கூறுகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றன.

பாசிசம் அதிகாரத்தை கைப்பற்ற எத்தகைய வழிமுறைகளையும் எந்த வடிவத்தையும் எடுக்க தயங்காது.மக்களின் உரிமைகளுக்காக போராடப் போவதாகவும் ஜனநாயகத்தை காக்க போவதாகவும் நல்லாட்சி தரப்போவதாகவும் வாய்ச்சவடால் அடித்து பேசும் சில சமயங்களில் புரட்சிகர பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களென்று வாய் கூசாமல் பொய்யாய் அடித்து விடும். எனவே பாசிசத்தின் வடிவங்களை திரை கிழிப்பதில் சமரசமின்றி போராடுவது மிக மிக முக்கிய அவசர அவசிய தேவையாகும்.

டிஜிட்டல் பாசிசம் :

எங்கெல்லாம் எண்கள் (0 1) அதாவது binary form-ல் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகிறதோ அவையெல்லாம் டிஜிட்டல் எனப்படுகிறது. இது பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற இரு தனி மதிப்புகள் மட்டுமே கொண்டது ஆகும். (A binary number has only two discrete values — zero or one) எலக்ட்ரானிக்ஸ் மொழியில் சிக்னல் என்றும் சொல்வார்கள். இன்றைக்கு உலகை விரல் நுனிக்கு எளிதாக கொண்டு வந்து நிறுத்துவது இதுதான். நடுத்தர குட்டிமுதலாளி வர்க்கத்தினரை ஆக்ரமித்து இருப்பதும் இதுதான்.  ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்து சுற்றிஇருப்பவர்கள் கூட அறியாமல் மூளைச்சலவை செய்து ஆட்கொள்ளும் சக்திபடைத்த்து.இதிலும் ஆளுமை செலுத்த பாசிசம் எடுக்கும் வழிவகைகளை அம்பலபடுத்துவதே பெரிமோ லெவியின் கட்டுரையின் நோக்கம் என்கிறார்.

பாசிசத்தின் கொடூர கொள்கைகள்

நவீன அல்லது டிஜிட்டல் பாசிசம் இன்னமும் கூட ஆரம்பகால பாசிச கோட்பாடுகளின் ஒன்பது அம்ச கொள்கைகள் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1. மனித உரிமைகள் மனிதாபிமானம் மனிதகெளரவத்தை மற்றும் மனித வாழ்வின் மதிப்பை முற்றிலும் இகழ்ச்சிக்குள்ளாக்குவது கேவலபடுத்துவது

2. மூர்க்கமான மூடத்தனம் நாகரிகமற்றதன்மை நடைமுறையோடு(அ) இயற்கையோடு ஒத்துப்போகாமலிருப்பது.

*பாசிசம் மத்திய காலத்து நிலபிரபுத்துவ காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது.

3.வலதுசாரிகளின் தேசியத்தோடு கூடிய இனம் என்ற முறையில் வெள்ளை இன ஆதிக்கத்தை கொண்டாடுவது

4.வெள்ளைதோல் ஆண் தலைமையை அடிபணிந்து கொண்டாடுவது மற்றும் பெண்ணடிமைத்தனத்தை காக்கும் ஆணாதிக்க மனப்பாண்மையை மேன்மைபடுத்துவது

5.பாசிசம் எப்போதும் மூலதனத்தை காத்து நிற்கும் என்பதால் இயல்பாகவே கார்ப்ரேட்நிறுவனங்களின் பாதுகாவலனாக நிற்கும்

6.விமர்சன நுண்ணறிவுக்கு மேல் ஒத்திசைவான உணர்ச்சியை உயர்த்தி பிடிப்பது. பெரும்பான்மை பலத்தின் மூலம் சமூக அறிவு கண்ணோட்டத்தை ஒடுக்குவது

7.மூர்க்கத்தனமாக ஒன்றுபட்டிருப்பது தங்களுக்கு தாங்களே சலுகைகாட்டுவது மற்றும் தங்களை தவிர மற்றவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது

8.விமர்சனம் மாறுபட்ட கருத்து அறிவுப்புர்வமான சிந்தனை ஆகியவற்றை இகழ்ச்சிக்குள்ளாக்கி பயனற்றதாக்கிவிடுவது

9.அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள் மீது குரூரமான முறையில் வன்முறை தாக்குதலுக்கு வெளிப்படையாகவே அங்கீகாரம் தருவது

இணைய வலைத்தளத்தில் டிஜிட்டல் பாசிசம் மூன்று முக்கிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய கருவிகள் மூலம் வேலை செய்கிறது.

  1. மிகப்பெரிய போர்அணிவரிசையாக பிரபலபடுத்தப்பட்ட மக்களை கவரக்கூடிய அதேசமயம் இனவெறி கற்பனையான சதி பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் தீவிரமாக பரவசெய்வது வலது சாரி மற்றும் நவ – பாசிச வலைத்தளங்களை அணிஅணியாக ஆன்லைனில் கொண்டுவருவது.
  2. இடைப்பட்டதன்மையுடன் கூடிய வலதுசாரி பொருட்கள் துணிவகைகைள் நினைவுப்பரிசு இசை சம்பந்தப்பட்ட பொருட்கள் இராணுவ கலைப்பொருட்கள் ஆகியவற்றை தரக்கூடிய ஆன்லைன் வணிக வியாபார வலைத்தளங்கள்
  3. ஆன்லைன் விவாத மேடைகள்

முதலில் அப்பாவிகளை போல டிஜிட்டல் பாசிசம் மிக நல்லவிதமான கருத்துக்களை பதிவிட ஆரம்பிக்கும்.தொடர்ந்து மெதுவாக எச்சரிக்கைகள் மற்றும் பொய்செய்திகள் திடுக்கிடும் வதந்திகள் கற்பனையான சதித்திட்டங்கள் உணர்வுகளை தூண்டக்கூடியவகையிலான அதேசமயம் உணர்ச்சிபூர்வமான கதைகள் மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை உண்மைகளை போல சொல்வது என்று டிஜிட்டல் பாசிசம் மெதுவாக தனது பதிவுகளில் கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்த போக்கில் படிப்படியாக தங்களால் தங்கள் வழிக்கு கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை தரும் நபர்களை டிஜிட்டல் பாசிசம். — ‘தங்களது சிந்தனை வளையத்துக்குள் கொண்டுவரமுடியாது என்று அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து’— படிப்படியாக பிரிக்கும் வேலையை செய்வார்கள்.

இந்த தளங்கள் வழியாக டிஜிட்டல் பாசிசம் தங்களிடம் பலியானவர்களுக்கென்று தொடர்ச்சியான தீவிரமான பிரச்சார தாக்குதலை கொண்டு சேர்க்கிறது. இதை அடுத்தடுத்து தொடர்ச்சியாக இடைவெளிக்கு காத்திருக்க வைக்காமல் அடுத்த வலதுசாரி செய்திதாள் வரும்வரை கூட அல்லது அடுத்த பிரச்சாரகரின் பிரச்சாரம் ஒளிபரப்பப்படும்வரை அல்லது அடுத்த ஆயுத பேரணி வரை காத்திருக்க விடாமல் டூவிட்களை நூற்றுக்கணக்கிலும் மெசேஜ்களை மைல் நீளத்திற்கும் தருகிறது.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் முன்பின் தெரியாத நபர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆகி தங்களுடைய வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தங்களது பலிஆடுகளாக மாறிப்போனவர்களிடம் ஒரு சிக்கலான பிரச்னை நடக்கிறது என்றோ பேரழிவுக்கு உள்ளாகப் போகிறோம் என்றோ பெரும் ஆபத்து வரப்போகிறது என்றோ ஒரு மாய பிம்பத்தை பயத்தை கட்டுவிக்கிறது. இம்மாதிரியான கற்பனைகள் தவறான பாதைகளை நம்பி செல்வதற்கும் அவர்களை சுற்றி வலதுசாரி வளையத்தை மேலும் மேலும் இறுக்கி தங்களுக்கு முன்பான யதார்த்தமான எந்த உண்மைகளையும் உணரமுடியாதவாறு செய்வதறகும் எளிதாகிறது.

ஏனெனில் ‘உடனடி அழிவுகள் என்பது -நாம் எல்லோரும் நினைப்பது போல உலகம் முழுதும் நடைபெறும் சம்பவங்களால் சீதோஷணநிலைமை மாறுவதால் நமது நாட்டைவிட்டு வளங்கள் கொள்ளைபோவதால் மற்றும் வேலைகளை தனியாருக்கு குத்தகைவிட்டுவிடுவதன் மூலம்தான் வரமுடியும்’ என்பதை பற்றி கவலைப்படாமல் வலதுசாரி பிரச்சாரகர்களின் வாய்வீச்சில் பலியாகி அவர்கள் முன்வைக்கிற எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ”நமது தலைவர் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும்” இதுதான்

நிஜங்களை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் டிஜிட்டல் பாசிசம் எல்லா முக்கியமான எதிரிகளையும் உள்ளுக்குள்ளே எழுப்பி பூதாகரமாக்கி அதிலிருந்து வலதுசாரி பயங்கரவாதம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற மாய பிம்பத்தை கட்டுவிக்கிறது.இந்த உத்தி ஆதி பாசிசத்திற்கு மிக முக்கியமானதாக இருந்தது

இன்றைக்கு நாள் முழுதும் (24/7) தினமும் டிஜிட்டல் தளங்களில் எளிதாக கிடைக்கக்கூடியதாக மாறிவிட்டது.

டிஜிட்டல் பாசிசம் எப்போதும் அங்கே இருக்கும் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் தனது எதிரி என கண்டுபிடிக்கப்பட்டவர்களோடு முழுகவனத்துடன் போராட தயாராக இருக்கும்.டிஜிட்டல் பாசிச உலகத்தில் எல்லாமே கறுப்பு வெள்ளை மட்டும்தான். கலர்களுக்கு இடமேயில்லை. எப்போதும் “நாம் எதிரே அவர்கள்”. அதாவது “us-vs.-them” “வெள்ளை இன மக்களுக்கு எதிராக மற்ற நிற மக்கள்”. எதை பிரச்சாரம் செய்தால் எடுபடும் என கணக்கீட்டு பிரச்சார மற்றும் வலதுசாரி ஆன்லைன் பிரச்சார வல்லுநர்கள் இவற்றை ரெட்பில்லிங் என்பார்கள்(redpilling).

மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் வருவதைப்போல உங்களுக்கு வாய்ப்பு என்பது நீலம் அல்லது ரெட்பில் மட்டுமே. நீல உறைக்குள் உங்களை புதைத்துக்கொண்டால் நீங்கள் ஒரு கற்பனையான பொய் உலகத்திற்குள் சஞ்சரிக்கலாம். ரெட் என்றால் உண்மையை பார்க்கச் செய்யும் அல்லது குறைந்த பட்சம் டிஜிட்டல் பாசிசம் வடிவமைத்திருக்கும் மாற்று உண்மைகளையாவது உணரச்செய்யும்.

இதுதான் மக்களின் புராண காலத்திலிருந்ததை போன்ற விருப்பங்களை பிரதிபலித்த மாற்று உண்மைதான் 6-ம் தேதி ஜனவரி 2021-ல் வாஷிங்டன் டி.சி. தலைநகர கட்டிடத்தில் நாம் பார்த்தது இதை இந்த ஒன்று கூட்டப்டட அல்லது மனித கூட்டத்தின் கோபமாக டிஜிட்டல் பாசிசம் வெளிக்காட்டியது. அமெரிக்க தலைநகரத்தை சுற்றிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதை பெரும்பான்மை அமெரிக்க மக்கள் விரும்பில்லை; வலதுசாரி பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றுதான் 81-74 ஆக பிரிந்த செனட், அதிபர் மீது நீக்கல் (impeachment) தீர்மானத்தை அரசியலமைப்பு படி நிறைவேற்றியது அவர்கள் ஏகமனதாகவே வலதுசாரி வேலைத்திட்டத்தை ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது. மௌனமான பெரும்பான்மையின் மாயை அங்கே இருக்கவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அவர்களின் பைத்தியக்காரத்தனமான காரண காரியங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார்கள்.

வேலை மற்றும் வேலையிலிருந்து ஓய்வாக இருப்பது ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகரித்த அளவில் கலக்கும்போது கொரோனா வைரஸ் உலகத்தை பயமுறுத்திய காலகட்டத்தில், வீட்டை அலுவலகமாக ஆக்கிகொள்வது அதிகரித்தபோது, மிகப்பெரிய ஊக்கம் பெறுவதை பார்க்கமுடிந்த்து. அலுவலகம் அல்லது தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து விட்டுக்கு போகும்போது பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள், ஹாலிவுட் ஆன்லைன் கணினி விளையாட்டுகள் மற்றும் யூ டியூப் ஆகியவற்றை தேடும் மனப்பாங்கு உருவாகுவது எப்போதையும் விட அதிகரித்த அளவில் இருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும்போது பொழுதுபோக்கு சம்பந்தமான செலவு குறைவது மற்றும் பொதுவெளி பழக்கம் குறைவதும் வாடிக்கையான அனுபவமாக பழகிவிடும். உதாரணத்திற்கு இரவு சாப்பிடும்போது செய்திகளை பார்ப்பது தொலைந்துவிடும். சமூக பழக்கவழக்கங்கள் தனிப்பட்ட அந்தரங்கமான இடங்களுக்கு மாறிவிடும். வாடிக்கையான அனுபவங்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்துவிடும்.

படிக்க:
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !

சமூகத்தில் கலந்திருப்பது மற்றும் வீட்டிலிருக்கும் போது மற்றவற்றுக்கு செலவிடும் நேரம் ஆகியவை சுத்தமாக இல்லாமல் போய்விடும். இந்த சமயம்தான் டிஜிட்டல் பாசிசத்திற்கு விலை மதிக்கவொண்ணாத புதிய புதிய கதவுகளை திறந்துவிடும். உண்மைதான். இது எல்லாமே ஒற்றைத்தன்மையை மேலும் அதிகரித்து இறுக்கமாக்கும். ஜெர்மனியின் மைக்கேல் சீமன் இதனை டிஜிட்டல் பழமைவாதம் என்பார். ஒரு பொய்யான செய்தி உருவாகும் உண்மையான முறை என்பது பற்றிய கட்டுரையில் விளக்குகிறார். இந்த பழங்குடியினராக்கும் போக்கு பார்ப்பவர்களை பொதுவான ஜனநாயக நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்கும் வேலையை செய்கிறது. மக்களுக்கிடையிலான உறவு வாக்களிப்பது மற்றும் ஜனநாயகம் பற்றிய கருத்துகள் மேலும் மேலும் சிதையும் போது மாற்றாக டிஜிட்டல் பாசிசத்திற்கு ஏற்ற களனாக அமைகிறது

இது நடக்க தொடங்கியவுடன் டிஜிட்டல் பாசிசம் தனது உண்மையான பாகத்தை மூடி மறைத்திருக்கும் திரைகளை விலக்கி சந்தேகப்படாத மக்கள் தொகையினரிடம் இன்னும் நிறைய பொய்ச் செய்திகளையும் உண்மையை போலவே நம்பக்கூடிய அளவு மாறான செய்திகளையும் அள்ளி விடும். டிஜிட்டல் பாசிசம் மற்றும் தீவர வலதுசாரிகளை, விரிந்த பார்வை மங்கி குறுகிய கண்ணோட்டத்திற்கு பலியானவர்கள், சரித்திரப் பூர்வமாக அணுகும் ஆற்றலை முழுவதும் இழந்து விட்டவர்கள் முழுதுமாக அனுமதித்து, அவர்கள் தங்கள் பிம்பங்களை இருப்பதைவிட பூதாகரமாக ஆக்கி காட்டுவதையும் அப்பாவியாக அங்கீகரித்து கொள்கிறார்கள். இதுக்குமேலே இருக்கவே இருக்கிறது உதிரி குழுக்கள் (Fringe groups). தங்களது சத்தத்தை அதிகப்படுத்திக் காட்ட தவறாக சித்தரிப்பதை பயன்படுத்துவார்கள். சமூக வலைத் தளங்களின் உதவி என்பது ஒரு கொள்கை பிரச்சார பீரங்கியாக செயல்பட அதனால் டிஜிட்டல் பாசிசம் தனது சொந்த, உண்மையான விஷ சுழலின் பரப்பை அதிகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும். செயற்கையாக ஆன்லைனில் வரும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் படைப்புகளையும் கடத்தி உயர்தரமானதாக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

இப்படி எண்ணிக்கையை உயர தூக்கி பிடிப்பதானது ஏற்கனவே வலதுசாரி பயங்கரவாதிகளால் கொதிநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுதி ஏற்றப்பட்டிருக்கும் விவாதங்கள் இன்னும் அதிகமான ஒற்றைத்தன்மை மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடிய செய்திகளை உள்ளே கொண்டுவருவதன் மூலம் அதிகரிக்கும். ஆன்லைனில் அமைந்திருக்கும் ‘பகிர்’ மற்றும் ‘தொடர்பினை ஏற்படுத்து’ மற்றும் ‘டுவீட்களை’ மறுபடி மறுபடி வெவ்வேறு பெயர்களில் போடுவது ஆகியவை வெறுப்புணர்வை வளர்க்கும் செய்திகளை வெகு தீவிரமாக பரவச்செய்து டிஜிட்டல் பாசிஸ்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள செய்கிறது. இது டிஜிட்டல் பாசிசம் தான் காட்சியளிப்பதைவிட மிக சக்திவாய்ந்த்தாகச் செய்ய வடிவமைக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தால் கருத்துக்கள் சொல்லப்படும் காலத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் கருத்துகளே முழுதுமாக ஆக்ரமித்து இருப்பதை போல ஒரு மாயத்தோற்றத்தை வலதுசாரி பயங்கரவாத உதிரி (fringe) அணிகள் ஏற்படுத்துகிறார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளில் 5 சதமே இருக்கக்கூடியவர்கள் வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்களுக்கு போடப்படும் லைக்ஸ்-சில் 50 சதத்திற்கு மேல் போட்டுத் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு இல்லாத எண்ணிக்கை அளவை கூட்டி காட்டுவதற்கு அனைத்து வேலைகளையும் டிஜிட்டல் பாசிசம் அரங்கேற்றுகிறது.

ஜெர்மனியிலிருக்கும் ஒரு வலதுசாரி கும்பல் தங்களுக்கு ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துக்கொண்டது. புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் நெருக்கமாக அணுகி சோதனை செய்தபோது அந்த கும்பல் தங்களுக்கு உண்மையில் 40 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதை ஒத்துக்கொள்ள வைத்தார்கள்.

ஒரு பக்கம் பெருங்கூட்டமே வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை பரப்புவது போல காட்டிக்கொண்டு பாசிக கும்பல்கள் தங்களது உண்மையான குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை மறைத்து கொள்ள மற்றுமொரு வழியாக பயன்படுவது சோசியல் பாட்ஸ் (Social Pots). தானே இயங்கும் நிலையிலுள்ள செய்தி தொடர்பு சமூக ஊடகங்களில் வழமையாக காணப்படுவது தங்களது கடமையாக கொண்டிருப்பது விவாதங்களின் திசைவழி மற்றும் உட்கிடக்கையை மற்றும் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை செல்வாக்கு செலுத்தி தீவிர வலது பக்கம் தள்ளிக் கொண்டுபோவது.

சோசியல் பாட்ஸ் என்பது சாட்பாட்ஸ்(chat pots) உடன் தொடர்புடையது என்றாலும் குறைந்த அளவு செய்தி பரிமாற்றத்தையே பயன்படுத்துகிறது. சாட்பாட்ஸ் தகவல்கள் ‘டுவீட்டை’ போன்று எளிய அல்லது முன்னமே பின்னப்பட்ட செய்திகளை விநியோகிக்கும்.

தானியங்கி தகவல் தொடர்பைத் தவிர வலதுசாரி பயன்பாட்டாளர்கள் விதவிதமான கணக்குகளை இயக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அது மறுபடியும் தீவிர வலது என்பது உண்மையில் இருப்பதைவிட பெரிதானது என்று கபடத்தனமாக காட்ட முயல்கிறது. அதே சமயம் அனுப்புநரின் உண்மையான அடையாளத்தை மறைக்கச் செய்கிறது. இது தெளிவாக தெரியக்கூடிய எண்ணிக்கையை பல மடங்காக்குவது மட்டுமல்ல மற்றவர்களை இந்த கும்பலில் சேர வற்புறுத்தி ஊக்கப்படுத்துகிறது. இவர்கள் இந்த தொடர்பில் தொடரும்போது ஒன்று அனுதாபம் மூலம் ஒத்த கருத்துள்ளவர்களாகிறார்கள், மற்றும் ஆதரவாளர்களாகிறார்கள். இதில் மோசமான தன்மைகளில் அவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை மொட்டை கடுதாசி போல அனுப்புவதில் மற்றவர்களுடன் போட்டி போட்டு அதிகளவு செய்கிறார்கள்.

இந்த செய்முறை வலதுசாரி சிந்தனைப் பெட்டியை உருவாக்குகிறது. இது டாக்பைலிங் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான ஆன்லைன் கொடுமைபடுத்துதல் மற்றும் பயமுறுத்தி தொல்லைகொடுக்கும் நடைமுறையாகும். பெரும் எண்ணிக்கையிலான கணக்குகள் வலதுசாரி பதிவுகளை இழிவுபடுத்தும் கருத்துகளோடு வருவதை திடீரென பூர்த்தி செய்யும். எப்போதும் வலதுசாரிகளின் எதிரியை, அதிலும் நன்கு அறிவை வெளிபடுத்தக்கூடியவர்களைக்  குறிவைப்பார்கள். இம்மாதிரியான டாக்பைலிங்-கின் நோக்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு பயபீதியை உருவாக்குவது உதவிக்கு யாருமே இல்லாததைப் போன்ற உணர்வைக் கொடுப்பது.

டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரிகள் ஆன்லைன் தளங்களை ஒரு யுத்தகளமாக பார்த்தனர். அங்கே அவர்கள் ஒரே ஒரு முழக்கத்தினடிப்படையில் இயங்கினர். அது “உங்களால் முடிந்தால் உங்களது போர்தளத்தை தேர்ந்தெடுங்கள். அந்த ஒன்றில் வெற்றி காணமுடியும் என்பதை உறுதிபடுத்துங்கள்” என்பதுதான். டிஜிட்டல் பாசிசத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று தன்னை ஒரு முன்னணி செயல்பாட்டாளாராக ஆக்கிகொள்வது என்பதுதான். அதனால் கூகுளின் படிப்படியான வழிமுறைகள் அதன் செய்திகளை முதல்நிலைகளில் கொண்டு சென்றுவிடும். கூகுள் முடிவுகளின் முதல்பக்கத்தை மட்டுமே கூகுள் செயற்பாட்டாளர்கள் பார்ப்பார்கள் என்ற முழு அறிதலோடு இதை செய்து முடிக்கிறார்கள்.

அத்தகைய நிலைப்பாடு ஆதிக்கநிலையை அடைந்தவுடன் தீவிர வலதுசாரிகள் தாங்கள் குறிவைத்த பார்வையாளர்களை மிக எளிதாக வசப்படுத்திவிடுவார்கள். இது பாதிக்கப்பட்டவர்களை டிஜிட்டல் பாசிசத்தின் ஆன்லைன் வலைப்பின்னலுக்குள் தீவிரமாக செயல்பட வைக்கக்கூடிய ஆற்றலை பெற உதவுகிறது. இந்த பயணத்தின் ஆரம்பத்தில் இதிலிருக்கும் எல்லா தகவல் தொடர்புகளும் உள்ளர்த்தம் எதுவும் இருப்பது போல தெரியாது.

கூகுளில் தங்கள் தேடலை ஒழுங்காக முடிப்பதில் மிகவும் சுமாரான நிலையிலிருப்பதால் இம்மாதிரியான முடிவுகள் அடிக்கடி வரும். நமது திரையில் காட்டப்படுவது என்னவென்றால் இடைவிடாத தொடர்ச்சியான வெவ்வேறு பொருள் தரக்கூடிய புரியாத வார்த்தைகள் மற்றும் சந்தேகத்தை உருவாக்கும் விவரங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொய்யான கற்பனை சதித்திட்டங்கள், முடிவில் மூலாதாரமான தவறான தகவல்கள் மற்றும் தவறான வழிக்குக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு தவறான தகவல்கள் விபரங்கள் தான் இவை.

படிப்படியாக அவர்களின் எந்த உள்ளர்த்தமும் இல்லாத, சொல்லப் போனால் குழந்தைத்தனமாக வலைத்தளங்களில் தேட ஆரம்பிப்பதை மனதை மயக்கும் பல்வேறு ஆசைகளைக் காட்டி அதன் மூலம் பலகீனமான சிந்தனை உள்ளவர்களை பலியாடுகளாக மாற்றி தங்களது டிஜிட்டல் பாசிசத்தின் வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

இந்த ஆட்டத்தில் என்ன நடக்கும் என்றால் பொதுவான கருத்துபரிமாற்றத்திற்கோ மற்றும் பொருள்களையோ தலைப்புகளையோ ஆராயக்கூடிய வார்த்தை பரிமாற்றங்கள் இருக்கவே இருக்காது. அதற்கு பதில் குறிவைக்கப்பட்ட பலியாடு தீவிர வலதுசாரிகளின் கொள்கை சிந்தனை கொண்டு உருவாக்கப்பட்ட வளைவுப்பாதைக்குள் தங்களின் ஆதிக்கத்துக்குள்ளான பொருளாக வருவாரா மாட்டாரா? என்பதுதான் முழு பணியாக இருக்கும்.

அநேகமாக டிஜிட்டல் பாசிசத்தின் மிகப்பெரிய வியப்புக்குரிய வெற்றியாக இருப்பது – இது பழமையான பாசிசத்திலிருந்து மிகவும் வேறுபட்ட – அனுதாபிகளும் ஆதரவாளர்களும் தங்களது ஆன்லைன் தளங்களில் வலதுசாரிகள் சொல்லக்கூடிய கற்பனையான சதிகளையும் தவறான வழிக்கு கொண்டு செல்லக்கூடிய விபரங்களையும் உன்னதமான செய்திகளாக தங்களது ஆன்லைன் தளங்களில் பதிவேற்றி தங்களை தாங்களே உருபெற்றுக்கொள்வதைதான் குறிக்கிறது.

டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக – அதாவது மேலே இருப்பது மற்றும் பின்பற்றுபவர்களை கீழே கொண்ட அமைப்பாக – இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

டிஜிட்டல் பாசிசத்தில், கோயாபல்ஸ் போன்றவர்களுக்கு இங்கு வேலை ஏதும் நிச்சயம் இருக்காது மற்றும் இதற்கு கட்டாயமாக பிரச்சாரம் செய்வதற்காக ஒரு பிரச்சாரத் துறைக்கான அமைச்சகம் தேவைப்படாது. மத்திய ஒழுங்கமைப்பு இங்கு இல்லை. சுற்றி ஒளிவட்டம் இல்லை; கட்சிக்கான இயங்கு இயந்திரம் இல்லை; போர் விளையாட்டுகளுக்கான போர் அணிகளும் இல்லை. இதெல்லாம் பழமையின் சின்னங்களாகி விட்டன. டிஜிட்டல் பாசிசம் நவீன நாஜிசத்தின் வழக்கிலில்லாத சில பாரம்பரிய நிறுவன வடிவங்களை கூட தகர்த்து விட்டு, வலதுசாரி ஆன்லைன் குப்பைகளின் சக்தியால் அவற்றை மாற்றியமைக்கிறது, இது புத்திஜீவிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்காது.

கண்டுபிடிக்கபட முடியாத டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரி படைப்பிரிவு ஒரு லிபரல் சமூகத்தை அழித்தொழிப்பதற்காக திறந்தவெளி சமூகத்தின் சட்டப்பூர்வ நிறுவனங்களான ஆன்லைன் தளங்கள் போன்றவற்றை சுற்றி வளைக்கின்றன.

சச்சா போரன் கோகன் சமீபத்தில் சொன்னது, “பேச்சு சுதந்திரம் என்பது அடையக்கூடிய சுதந்திரம் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்”. டிஜிட்டல் பாசிசம் இரண்டையுமே பயன்படுத்தி உள்ளிருந்தே மொத்த சுதந்திரத்தையும் ஒழித்துக்கட்டுகிறது.

“முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பிற்போக்கு நடவடிக்கைகளையும் பாசிசத்தின் வளர்ச்சியையும் அவற்றின் தயாரிப்பு கட்டங்களிலேயே யார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ அவர்கள் பாசிசத்தின் வெற்றியை தடுக்கும் நிலையில் இருக்கவில்லை.அதற்கு நேர்மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கிறார்கள்” டிமிட்ரோவ்.-

கட்டுரையாளர்கள் : தாமஸ் க்ளிகவெர் மற்றும் நார்மன் சிம்ஸ்.
சில கூடுதல் தரவுகளுடன் தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : Counter currents

கருத்துகள் இல்லை: