வியாழன், 4 மார்ச், 2021

நடிகர் விமலின் மனைவிக்கு 'சீட்' தி.மு.க.,வில் எதிர்ப்பு

 நடிகர் மனைவிக்கு 'சீட்' தி.மு.க.,வில் எதிர்ப்பு
dinamalar :சென்னை:நடிகர் மனைவிக்கு, தி.மு.க.,வில், 'சீட்' கொடுப்பதற்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நடிகர் விமலின் மனைவி ப்ரியதர்ஷினி, திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விமல் மீது மோசடி புகார் கூறி, தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூரில் வசிக்கும் நான், பட்டுக்கோட்டையில் தியேட்டர் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது. 'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார்.என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன். விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத் தெருவில் நிற்கிறேன்.

இந்நிலையில், தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன். 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, 'சீட்' கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: