
ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கியபோது, அங்கு இருந்த
தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளர் சீமானூர் பிரபு, ஸ்டாலின் வந்த காரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். வழியில் ஜீயபுரத்தில் ஸ்டாலின் நடந்துசெல்லும்போது கையில் கொடியை ஏந்தியபடி ஸ்டாலினுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சீமானூர் பிரபுவுக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த கொடியோடு, நெஞ்சுவலியால் துடித்தபடி, கீழே சரிய, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சீமானூர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாகக்
கூறியதை அடுத்து, அவரது உடல் திருச்சி
தொட்டியத்தை அடுத்துள்ள சீனிவாச நல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு
செல்லப்பட்டது.
கடந்த 1986ம் ஆண்டு முதல் திமுகவில் இருக்கும் இவர், உறுப்பினராகச் சேர்ந்து, மாவட்ட பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலர் என அடுத்தடுத்து வளர்ந்தவர். கடந்த 2016ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பல்வேறு நபர்கள் காய்நகர்த்தியபோதும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிபாரிசில் திமுக தலைமை, சீமானூர் பிரபுவுக்கு வாய்ப்பு வழங்கியது. வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு அரசியலில் கொஞ்சம் அமைதியாக இருந்தவர், தற்போது மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். காவிரி பிரச்னைக்காக தி.மு.க நடத்திய போராட்டங்கள், சாலைமறியலில் முன்னின்று நடத்தி வந்தார்.
அந்த வகையில் காவிரி உரிமையை மீட்கும் வகையில் நடந்த பயணத்தில்
சீமானூர் பிரபு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அவரின் இறுதி சடங்கில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக