வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகிறார். ஐதராபாத்தில் குடியேறுகிறார்?

தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க நயன்தாரா முடிவு செய்துள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் தனது இருப்பிடத்தை நிரந்தரமாக ஐதராபாத்துக்கு மாற்ற நயன்தாரா முடிவு செய்திருக்கிறார் என்று சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கு படங்களில் நடிக்கவே நயன்தாராவும் அதிகம் விரும்புகிறார். அந்த அளவுக்கு தமிழ் படங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழில் 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இல்லை. தெலுங்கு ஹ¦ரோக்களை போலவே தமிழ் ஹீரோக்களும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழில் நடித்தபோதுதான் இருமுறை அவர் காதலில் விழுந்தார். 2 காதல்களும் தோல்வி அடைந்தாலும் அந்த காதலை கொடுத்த தமிழகத்தை அவர் மறக்க மாட்டார். தென்னிந்திய படங்களில் எல்லா மொழியிலும் பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார்.
அறிமுகமான நாட்களிலிருந்து ஐதராபாத், சென்னை என்று மாறி மாறி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை' என்றனர்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை: