சனி, 26 ஜூன், 2010

மைக்ரோசாப்ட் வல்லுனர் கப்ளான் யுனிக்கோடுக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சியடையும்

யுனிக்கோடுக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சியடையும்
யுனிகோட் முறைக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சி அடையும் என்று மைக்ரோ சாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியில் தமிழ் இணைய ஆய்வரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறியதாவது,
வட இந்திய மொழிகளுக்கான இன்டிக்கட்டமைப்பில், யுனிக்கோடு தமிழை இணைத்து பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால் யுனிக்கோடு தமிழுக்கான கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்று கட்டமைப்பு ஏற்படுத்தினால் அனைத்து வசதிகளையும் கம்ப்யூட்டரில் எளிதாக கையாளலாம்.  கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்துவோர், யுனிக்கோட் தமிழுக்கு மாற்றிக்கொண்டால் தான், கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், இன்டர்நெட் பயன்பாட்டிலும், தமிழ் வளர்ச்சியடையும் என்றார்.

கருத்துகள் இல்லை: