திங்கள், 21 ஜூன், 2010

400 பெண் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு

பெண் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு
இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாகிய 400 பெண்களுக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இதற்கென அவர்களுக்கு ஆறுமாத காலம் தையல் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் ஞாயிறன்று கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். பம்பைமடுவில் உள்ள சரணடைந்த பெண் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 300 பேரும், பூந்தோட்டத்தில் உள்ள பெண்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 பேருமாக 400 பேர் இவ்வாறு இந்த வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இவர்களுக்கு உணவுடன் கூடிய தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: