திங்கள், 21 ஜூன், 2010

விடுதலைப்புலிகள்,தமிழகத்தில் மூன்று பேர் பொலிஸாரால் கைது

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் மூன்று பேர் கியூவ் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவா, தமிழ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக பொலிஸாரின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 4900 சாதாரண டெட்டனேட்டர்களும், 430 வரையிலான இலத்திரனியல் டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரும், தம்மை இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் தங்கி இருந்துள்ளனர். அத்துடன் கடல் மார்மக்கமாக பல கடத்தல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: