வெள்ளி, 25 ஜூன், 2010

பேராசிரியர கைது,் பி.எச்டி. பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற

பேராசிரியர் மீது 4 பெண் பேராசிரியைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் மாதவன் என்பவர் சமீபத்தில் தன்னிடம் பி.எச்டி. பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், மேலும் ஒரு பேராசிரியர் மீது மாநில கல்லூரியில் வேலைபார்க்கும் 4 பெண் பேராசிரியைகள் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.
குறிப்பிட்ட பேராசிரியர் தங்களை தகாத வார்த்தைகளை சொல்லி அடிக்கடி திட்டுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், மேலும் தகாத செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாகவும் 4 பெண் பேராசிரியைகளும் தங்களது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: