சனி, 26 ஜூன், 2010

ஈழத்தில் சாதி இல்லையாம்? சீமானே நன்றாக கண்ணை திறந்து பத்திரிக்கை விளம்பரங்களை

தமிழ் ஈழத்தில் சாதி கிடையாது தமிழன் தமிழனாக வாழ முடிந்தது’’என்றுசீமான் பேசினார.

நம் நாட்டில் ஹிந்தி தேசிய மொழியாக உள்ளது. தேசிய கீதம் வங்க மொழியில் உள்ளது. ஆனால் நாம் தமிழனாக இருந்தும் தமிழில் பேச முடியவில்லை. தமிழில் வழக்காட முடியவில்லை.
இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்,பெண்ணீய விடுதலை பற்றி இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இன்னும் நமக்குத் தேவையான மின்சாரம் கூடக் கிடைப்பதில்லை. ஆனால் நம் இந்தியா 2020-ல் வல்லரசாகும் என்று மட்டும் நம் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்கள் சிந்திக்கக் கூடாது, அறிவான சமுதாயம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முனைப்பில் வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்து சாதித்துள்ளார்கள். அனைத்து குற்றங்களுக்கும் கருவறையாக இந்த மதுக்கடைகள் உள்ளதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தமிழ் ஈழத்தில் சாதி கிடையாது பெண் சுதந்திரம் இருந்தது. தமிழன் தமிழனாக வாழ முடிந்தது’’என்றுசீமான் பேசினார்.
comments: 
தம்பி சீமான் நன்றாக கனவு காண்கிறார் .  சினிமா கதைவிடுவது வேறு நிஜம் வேறு அன்பரே. திரையில் உமது கற்பனை வளத்தை அவிழ்த்து விடும் நாமும் ரசித்து விட்டுப்போகிறோம். சும்மா சும்மா அம்புலிமாமா கதை அளக்க வேண்டாம்.
ஈழத்தில் சாதி இல்லையாம்?  சீமானே நன்றாக கண்ணை திறந்து பத்திரிக்கை விளம்பரங்களை பாரு ஒய்.
உயர்குடி யாழ்ப்பாண வெள்ளாள குலத்தில் உள்ள படித்த மணமகளுக்கு என்ற வரிகள் எத்தனை தரம் வருகிறது என்று படித்து பாரும்.

கருத்துகள் இல்லை: