சனி, 26 ஜூன், 2010

இந்தி நடிகை தூக்கு போட்டு தற்கொலை



மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
விவேகா பானர்ஜி,  2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக கார் அப்பார்ட் மென்ட்டில் தங்கி வந்தார்.

நேற்று அவர் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: