செவ்வாய், 22 ஜூன், 2010

உறவினர்கள் அற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த தமிழ் பேசும் நான்கு பிள்ளைகள்

உறவினர்கள் அற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த தமிழ் பேசும் நான்கு பிள்ளைகள் கண்டி ரங்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தெல்தெனியவில் இருந்து தங்கப்பூ நோக்கி பயணிக்கும்  தெல்தெனிய பேருந்து சாலைக்கு சொந்தமான அரச பேருந்தில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பஸ் சாரதியினால் இந்த பிள்ளைகள் ரங்கல காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட குறித்த பிள்ளைகள் தெல்தெனிய நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கண்டி டிக்கிரி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இவர்களின் பெயர்கள் 8 வயதுடைய கணேஷ் வினோத் 7 வயதுடைய பிரகாஷ் ராஜ் 5 வயதுடைய சிதம்பரம் 3 வயதுடைய கலைவாணி என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: