புதன், 28 ஏப்ரல், 2021

அசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . கட்டிடங்கள் இடிந்து சேதம் 6.4 - strong earthquake shook the state of Assam this morning

tamil.oneindia.com இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப் பட்டது.

கருத்துகள் இல்லை: