
இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள்
ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை
திரும்பியது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தது.
காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு
உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை
சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மீண்டும்
கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.<
வெள்ளிக்கிழமை
5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை
அனுமதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால்
செல்போன் தொடர்பு சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக