வியாழன், 22 ஆகஸ்ட், 2019

150 மருத்துவ மாணவர்களை மொட்டை அடித்து வணங்க வைத்த மூத்த மாணவர்கள் உத்தர பிரதேசம்


Muthu Selvan : உத்தரப் பிரதேசத்தில் சய்ஃபாய் ஏன்னுமிடத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 150 முதலாமாண்டு மொட்டையடிக்கப்பட்டு, வரிசையில் சென்று மூத்த வகுப்பு மாணவர்களை வணங்கச் செய்திருக்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடு நிகழ்வைக் கண்டிக்காதது மட்டுமின்றி, இத்தகைய நிகழ்வு புது மாணாக்கர்க்கு ஓர் உந்தாற்தலாக அமையும் என்றும் நன்னடத்தைக்கு வழிவகுக்கும் என்றும் இது மாணாக்கர்களின் நிலையை உயர்த்தவே உதவும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராச் குமார் கூறியுள்ளார். அவரைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக ஆளுமையும் இது ஒரு கேடான நடைமுறை அன்று என்றும், இது ஒரு நல்ல கரணமே (சடங்கு) என்றும் சான்றளித்து மகிழ்ந்துள்ளது (சிங் சப்).
இதனை உசாவுவதற்காக அமைக்கப்பட்ட இருவர் குழுவும் இதனை புது மாணாக்கர்களைப் பகடி செய்து வரவேற்கும் முறை (ragging) அல்ல என்றும் கூறியுள்ளது!

யோகி வழிநடத்தும் மாநிலமாயிற்றே! அதுதானே சங்கிகளின் வருங்கால இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு?!
இனி சங்கிமங்கிகள் ஆளும் மாநிலங்களில அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும்் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு, புதிய மாணாக்கர்க்கு உந்தாற்றல் அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
மாணாக்கர்களை ஒழுக்கமுடையோராக மாற்றும் முகத்தான், தேவைப்பட்டால் புதியக் கல்விக் கொள்கையிலும் சேர்க்கப்படலாம்.
சங்கிப் பெரும்பான்மையில் எது
வேண்டுமானாலும் நடக்கலாம்.<

கருத்துகள் இல்லை: