வெள்ளி, 30 டிசம்பர், 2016

சுமந்திரன்:லக்ஷ்மி மித்தலின் இந்திய வீட்டு திட்ட வில்லங்கங்கள் .. 65000 வீடுகள் .. அமைச்சர் சுவாமிநாதனும் லக்ஷ்மி மித்தலும் ....

Wigneswaran also added that the cost per house seemed extremely high, whereas he believes that for the cost of Rs. 21 million, they could build two to three houses. “Instead of 65,000, we can make 130,000 houses,” he added.
https://www.colombotelegraph.com/index.php/tna-accuses-swaminathan-of-influencing-mps-in-arcelormittal-deal-to-build-tin-houses/ இறுதி எச்­ச­ரிக்­கை­யாக அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு இன்று நான் சொல்­­கின்ற செய்தி. நொந்துபோய்
இருக்­கின்ற எம் மக்­க­ளு­டைய வாழ்க்­கை­யுடன் விளை­யாடவேண்டாம் எங்­கள் மக்­க­ளு­டைய தன்மானத்­துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பார­ளு­மன்ற உறுப்­பினருமான எம் ஏ.சுமந்­திரன் தெரிவித்தார். கர­வெட்டி பிர­தே­ச­செ­ய­ல­கத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட கலா­சார பெரு விழாவில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்­றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கர­வெட்டி பிர­தே­ச­செ­யலர் ச.சிவஸ்ரீ தலை­மையில் பெரு விழா நடை­பெற்­றது.
இந்­நி­கழ்வில் அவர் மேலும் கூறி­ய­தா­வது  எங்­க­ளு­டைய  பண்­பாட்­டுக்கும் வாழ்க்கை முறைக்கும் எதி­ரான விட­யங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்த உலோ­கத்­த­கட்­டி­லான வீட்டினை எமது தலைவரான எதிர்­கட்­சித்­த­லைவர் வீடு என்று கூட கூறு­வ­தில்லை. கூடு என்­றுதான் அழைக்­கின்றார்.
திரும்ப திரும்ப பிர­த­ம­ரிடத்திலும் பாரா­ளு­மன்­றத்­திலும் எமது தலைவர் சொல்­வது எமது மக்கள் மிகவும் நொந்து போய்­விட்­டார்கள்.
அடிப்­ப­டை­யி­லான ஒரு­வீடு கொடுக்க வேண்டும். கூடு எல்லாம் வேண்டாம். இந்த இரும்­புக்­கூட்­டினை கொடுப்­பதன் மூல­மாக அவர்களுக்கு நீங்கள் நிவா­ரணம் கொடுக்­க­வில்லை. அவர்­க­ளுக்கு நிரந்­தர வதி­விடம் நீங்கள் அமைத்து கொடுக்­க­வில்லை.
ஒரு நிரந்­தர கல்வீடு கட்­டு­வ­தற்கு எவ்­வ­ளவு செல­வா­கின்­றது. அதை­விட இரட்­டிப்­பான செல­வில் தற்­கா­லிக இரும்புக் கூட்டை கொடுப்பதன் மூல­மாக எங்­களை ஏமாற்­று­கின்ற செயற்­பாட்­டில் நீங்கள் ஈடு­பட்­டுள்­ளீர்கள்.
அந்த மிகுதிப் பணம் எவ­ரு­டைய பையிலே போய் சேரு­கின்­றது என்­பது எங்­க­ளுக்கு தெரியும். இது முற்று முழு­தான ஓர் ஊழல் செயற்பாடு. அதை ஊழ­லில் ஊறிப்­போன செயற்­பாடு என்­பதை நாம் சொல்லி இருக்­கின்றோம்.
அதையும் கேட்­காமல் அமைச்சர் சுவா­மி­நாதன் தொடர்ச்­சி­யாக எங்கள் மக்­களை ஏமாற்­று­கின்ற விதத்­திலே பத்­தி­ரி­கையில் விளம்பரங்களை போட்டு செயற்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் அந்த ஊழலை நாம் வௌிப்­ப­டுத்­து­கிற காலம் வந்­துள்­ளது.
வெளிப்­ப­டை­யாக எவ­ருக்கு எவ்­வ­ளவு கையூட்டு கொடுக்­க­பட்­டுள்­ளது என்­பதை அறி­விப்­ப­தற்­கு­ரிய காலம் வந்­தி­ருக்­கின்­றது.
இறு­தி­யாக இறுதி எச்­ச­ரிக்­கை­யாக அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு நான் இன்று சொல்­லு­கின்ற செய்தி, நொந்து போய் இருக்­கின்ற எம் மக்களு­டைய வாழ்க்­கை­யுடன் விளை­யாட வேண்டாம். எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய தன்­மா­னத்­திற்கு நீங்கள் இழுக்கு கொண்டுவர வேண்டாம்.
 தமிழ் பெய­ரைத்­தாங்கி இருக்­கின்ற உங்­க­ளு­டைய பெய­ருக்கும் வீணாக இழுக்கை கொண்டு வர எங்­களை உந்­தா­தீர்கள். ஊழலை ஒரு போதும் அனு­ம­திக்கமாட்டோம். எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு அவ­சர தேவை ஒன்று இருக்­கின்­றது.
என்ற ஒரே கார­ணத்தை வைத்து மற்­ற­வர்கள் தங்­க­ளு­டைய பைகளை பணத்­தினால் நிரப்­பு­கின்ற செயற்­பாட்­டினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
அதற்கு எதி­ரான நட­வடிக்­கை­யினை எடுப்போம் என்ற இறுதி எச்­ச­ரிக்­கையை அமைச்­ச­ருக்கு கொடுக்­கின்றோம் என்றார்.  முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: