வியாழன், 13 அக்டோபர், 2016

பிளாஸ்டிக்கை ஒழிக்க (மனநிலை சரியில்லாதவர்) சமூக ஆர்வலர் தற்கொலை


தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர் (20). இவர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்து போராடியவர், டவரில் ஏறியும் போராடினார். ஆனால் அரசாங்கம் பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக சொன்னதோடு சரி ஒழிக்கும் நடவடிக்கையில்லை. இதனால் மனம் வெதும்பிய ஜவகர், கடந்த 10 ந் தேதி ஒரு வீடியோவில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. 127 கோடி மக்கள் நல்லா வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் யானை பசிக்கு சோளப்பொறி போல நடந்து கொள்கிறது. சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று வீடியோ பதிவை வெளிட்டு, புது ஆற்றுப்பா லத்தில் இருந்து குதித்துள்ளார். அவரது உடல் கண்டிதம்பட்டு பொட்டவாச்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது. இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடியோ, செய்தி :இரா.பகத்சிங்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: