எனவே, தமிழக சட்டசபைதேர்தலிலும், பீஹார் பாணியில் கூட்டணி அமைக்க, காங்., துணைத் தலைவர் ராகுல் விரும்புகிறார். அதனால், 'தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால், 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என, அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த விருப்பத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், தி.மு.க., மேலிட தலைவர்களிடம் தொலைபேசியில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
பேச்சுக்கே இடமில்லை:
அதைக்
கேட்டதும், தி.மு.க., மேலிட தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
'தி.மு.க.,வுடன்கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு, 20 முதல், 25 சீட்களை
மட்டுமே தர
முடியும். ஆட்சியில் பங்கு தர முடியாது; அதுபற்றிய பேச்சுக்கே இடமில்லை'
என, ஆவேசமாக கூறியுள்ளனர். அத்துடன், கூட்டணி தொடர்பாக, தி.மு.க., தலைவர்
கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேச
செய்யப்பட்டிருந்த ஏற்பாடும், ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 'தி.மு.க.,வின் நிபந்தனைகளை காங்கிரஸ் ஏற்றால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் பேசுவேன்; இல்லையெனில், பேச்சே வேண்டாம்' என, கருணாநிதி கண்டிப்புடன் கூறி விட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தன் நிபந்தனைகளில் உறுதியாக இருந்தால், வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுடன் பேச்சு நடத்தும்படி, தி.மு.க., மேலிட தலைவர்களுக்கு, கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக