திங்கள், 5 அக்டோபர், 2015

ஆஸ்கர் விருதுக்கு ஷோபா சக்தி நடித்த பிரெஞ்சு திரைப்படம் "தீபன்"!

சோபா சக்தி என்ற ஈழத்தமிழர் நடித்த ‘தீபன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டு இயக்குனரான சாக் ஆடியார் இயக்கி இலங்கை நாட்டின் எழுத்தாளரும் ஈழத்தமிழருமான சோபா சக்தி நடித்து 2015ம் ஆண்டு வெளியான படம் ‘தீபன்’. இலங்கை உள்நாட்டு போரிலிருந்து தப்பித்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் குடியேறும் தீபன் அங்கு ஒரு அகதி என்ற நிலையில் அவர் சந்திக்கும் அவலங்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் இந்த படத்தின் கதையாக காட்டப்பட்டது.சோபா சக்தியுடன் தமிழ் நாட்டை சேர்ந்த காளீஸ்வரி என்ற தமிழ் நடிகை யாழினி என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.ஈழத்தமிழர்கள் அயல்நாடுகளில் வாழும் வாழ்க்கையையும் சந்திக்கும் பிரச்னைகளையும் உணர்வுப் பூர்வமாக வெளிக்காட்டிய இந்த திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் உயர் விருதான தங்கப்பதக்கத்தை ஏற்கனவே வென்றுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசிய சினிமா மையத்தில் அதன் தலைவரான பிரடரிக் பிரடின் என்பவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எதிர்வரும் 88 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 5 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படவுள்ளதாகவும் இந்த 5 படங்களில் ‘தீபன்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல விருதுகளையும் குவித்து வருகிறது.’தீபன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதில் பங்கேற்பது தொடர்பான முறையான அறிவிப்பு எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.பின்னர், 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்காவில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ’தீபன்’ உள்ளிட்ட 5 பிரான்ஸ் படங்களும் திரையிடப்பட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ள   dinaethal.com/

கருத்துகள் இல்லை: