செவ்வாய், 20 ஏப்ரல், 2021

தாமதமாகும் தமிழகத் தேர்தல் முடிவு...? வாக்கு எண்ணும் மேஜைகள் குறைப்பு !

Vivekanadan T : அதாவது காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து நள்ளிரவு வரை செல்லும் போல... இப்படி தேர்தல் இறுதி முடிவு வெளியாவது மிக தாமதமாக போவதை அந்த சூழலை ஏற்றுக்கொள்வதா இல்லையா...? திமுக தலைமையும் மற்றும் அதன் கூட்டணி தலைவர்களும் இந்த விஷயத்தில் ஆணையத்திடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பாருங்கள்....குறிப்பாக ஏதாவது உள்குத்து இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள்...
May be an image of text that says 'வாக்கு இயந்திரங்கள் அதிகம்- மேசைகள் குறைவு அதிக வாக்குச்சாவடிகள் கொண்ட தொகுதிகளில் 40 சுற்றுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டம்'

   :  

 நக்கீரன் :சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது.
'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தலைமையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணும் மேஜைகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் இருக்கும் நிலையில், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக, 7 அல்லது 10 மேஜைகளாகக் குறைக்கப்படவுள்ளது.
மேஜை எண்ணிக்கை ஏழா? அல்லது பத்தா? என்பதை வாக்கு எண்ணும் மையத்தின் பரப்பளவைப் பொறுத்து இறுதி செய்யப்பட உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தது.

 

அதிக வாக்குச்சாவடிகள் உள்ள தொகுதிகளில் 40 சுற்றுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணப்படும் மையங்களில் மேஜைகள் குறைக்கப்படுவதால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேஜைகள் குறைக்கப்படுவது குறித்து மீண்டும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு நாளை ஆலோசிக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை: