புதன், 21 ஏப்ரல், 2021

வேலூர் மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழப்பு! ஆக்சிஜன் குழாயில் கசிவு

malaimalar : 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதனிடையே, வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: