
கடந்த, 2011 சட்டசபை தேர்தல் வரை நீடித்த, தி.மு.க., - -காங்., கூட்டணி, அதன்பின் உடைந்தது. வரும் சட்டசபை தேர்தலுக்காக, இக்கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்த, ம.தி.மு.க., தற்போது, 'மக்கள் நலக் கூட்டணி'யில் இடம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, இலங்கை தமிழர், விடுதலைப் புலிகள் பிரச்னையிலும், ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. இதனால் தமிழ் அமைப்புகள் மற்றும் சிலகட்சிகளின் ஆதரவு வரும் தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும் என்று, அக்கட்சி தலைமை நம்புகிறது.ஆனால், இந்த பிரசாரத்தை, மக்கள் மத்தியில் கொண்டு சென்று, தி.மு.க., - -காங்., கூட்டணியை விமர்சிப்பதற்கு, அ.தி.மு.க.,வில் சரியான தலைவர்கள் இல்லை. இதனால், இப்பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், ம.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்படுத்த அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. கடந்த காலங்களைப் போலவே, 10, 'சீட்'கள் வரையில், ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கிக் கொடுக்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளனர். இதற்காக ம.தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., தரப்பிலிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது சிறப்பு நிருபர் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக