சனி, 27 பிப்ரவரி, 2016

உபியில் சுப்பிரமணியசாமி கார் தாக்குதல்...முட்டை, தக்காளி வீச்சு ( வீடியோ )

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி சென்ற கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டை, தக்காளிகளை வீசினர். கான்பூரில் உள்ள விஎஸ்எஸ்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சுப்ரமணியன் சாமி நேற்று வெள்ளிக்கிழமை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜேஎன்யு விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்தள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்த போது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய போராட்டக்கார்கள் கார் மீது முட்டை, தக்காளி மற்றும் மையை வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: