ஜாதியின் பெயரால் பிளவு
இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய
மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக
சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்)
மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற
செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர்.
அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து
வைக்கின்றனர். கோவில் பெயரால் சுரண்டல்!
ஒரு குறிப்பிட்ட பணிக் காக
பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே
நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில்
சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற
செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத்
துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந்
தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில்
வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?
எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும்
இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான்
பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில்
வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள்
படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக