செவ்வாய், 20 ஜூன், 2017

பார்ப்பனர்கள் பொதுவெளியில் பார்ப்பன தமிழில் பேசுவது ஜாதி அடையாளம்... நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம்!

karthikeyan Fastura: நேற்று என் பதிவை பார்த்துவிட்டு என் நண்பன் இன்பாக்ஸ்சில்
ரெம்பவும் குறைபட்டுகொண்டான். நான் என்ன செய்ய மனதில் பட்டதை கூறினேன். பார்ப்பனர்கள் என்றில்லை எந்த சாதியினரிடமும் தனிப்பட்ட விரோதம் எனக்கு கிடையாது. அப்படி இருந்தால் அதுவும் ஜாதிவெறி தான். மனிதாபிமானம் பேச முடியாது. இப்போதும் நிறைய பார்பன நண்பர்கள் இருக்கிறார்கள். அவரவர்க்கு ஒரு எல்லை வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் சாதியோடு இணைக்க முடியாது.
முற்போக்கு பேசும் அல்லது நடிக்கும் பிரபல பார்பனர்களோடு தான் எனக்கு பிணக்கு. தேனொழுக ஒரு பக்கம் முற்போக்கு பேசுவோம் மறுபக்கம் பிற்போக்காக சுயசாதி பெருமையுடன் நடந்துகொள்வோம் அவர்களின் இந்த இரட்டை வேடத்தை மத்திய பிஜேபி அரசும் அவர்களின் கோமாளித்தனங்களும் தான் வெளிக்கொண்டு வந்தது பாதி என்றால் மீதியை அவர்களாகவே கதைகட்டி இட்டுகட்டி மாட்டிக்கொள்வார்கள். சுவாதி கொலை வழக்கு, ஜேஎன்யு மாணவர் போராட்டம், ஐஐடி போராட்டங்களில் நியாயமாக பேசுவதாக நினைத்து அநியாயமாக பேசி மாட்டிக்கொள்வார்கள். நேற்று அப்படி ஒரு போலி முற்போக்கு பார்பனர் எழுதிய பதிவின் மீதான கடுப்பில் தான் எழுதினேன். இன்னும் எழுதவே செய்வேன்.

இன்றும் சொல்கிறேன் உண்மையான முற்போக்குடன் நடந்துகொள்ளும் பார்பனர்களை காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆனால் அவர்கள் தான் முற்போக்காக வாழ்ந்து சுயசாதி பெருமையில் இருந்தும், நூற்றாண்டு களங்கத்திலிருந்தும் வெளிவர வேண்டும். அந்தப் பொறுப்பு அவர்களுக்கே அதிகம் இருக்கிறது என்று கருதுகிறேன். அதற்கு முதலில் அவர்கள் பார்பனிய அடையாளத்தை துறக்க முன் வர வேண்டும். அதில் குறிப்பிடதக்கது மொழி. பொதுவெளியில் பார்பனிய மொழியில் பேசுவதே அவம் என்பதை உணரவேண்டும்.
ஒருவேளை என் கருத்தில் பிழை இருப்பின் அநீதி இருப்பின் அதை மாற்றிக்கொள்ள எந்த தயக்கமும் இல்லை.

கருத்துகள் இல்லை: