வெள்ளி, 23 ஜூன், 2017

Enter the Meira Kumar... குடியரசு தலைவர் தேர்தலில் 17 எதிர்கட்சிகள் ஒரே அணியில்!

Specialcorrespo/ காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமை தாங்கிய இந்த ஆசாத்,
மல்லிகாஜூர்ன கார்கே, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான சரத்பவார், மாயாவதி, மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி
மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பியுமான பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பின.
மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மற்றும் மாநிலங்களவை எம்.பி. பாலசந்திர முங்கேகர் ஆகியோரது பெயரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மீரா குமாருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால் பின் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘‘ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த நாங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அவருக்கு இதர கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் அவரை ஆதரிப்போம் என கூறிய பகுஜன் சமாஜ் கட்சி, தற்போது அதை வாபஸ் பெற்று மீரா குமாரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
தலித் நிறுத்தினால் எதிர்கட்சிகள் சிதறும் என்று நம்பிய மோடி மற்றும் அமித் ஷா கனவில் இதனால் மண் விழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: