டானா (TANA) என்றழைக்கப்படும் வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் ஆண்டு விழா மிகவும் பிரசித்து பெற்றதாகும். இந்த ஆண்டு விழா செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்கா முழுவதிலிருந்தும் 5000 பேர் பங்கேற்றனர்.
ஆந்திரா மாநில துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அமைச்சர் கம்மிநெனி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ராமாராவ், பாராளுமன்ற உறுப்பினர் முரளி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க நிகழ்கலைக் கழகத்தின் பறையிசை இடம் பெற்றது. பறையிசையுடன், த்ரிவர்கமு பாடல்களுக்கு சிறப்பு இசை அமைத்து நடனத்துடன் அரங்கேற்றினர். தொடர்ந்து பறை இசைக்கு ஏற்ப நடனப் பெண்கள் பரதநாட்டியம் ஆடினார்கள்.
த்ரிவர்கமு
மூன்று பாலிலும் உள்ள குறட்பாக்களின் தெலுங்கு மொழிபெயர்ப்பை, திருபுவனம் ஆத்மனாதன் இசையமைத்து பாடி பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
பறைக்குப் பாராட்டு
திருக்குறளை (த்ரிவர்கமு) நடன வடிவில் அரங்கேற்றியது இதுவே முதல் நிகழ்ச்சியாகும்..
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, முடிந்தவுடன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை மாநாட்டின் சிறப்பு அம்சம் என்றுவிழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.
ஐடி காரர்களின் ஜாலம்
தாள இயக்கம் நந்தா, பின்னணி யசோதா, ரம்யா, கவிதா, ஒருங்கிணைப்பு ரமேஷ் செருபலா, கலை வடிவாக்கம் இரா பொற்செழியன் என பத்திற்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி அமைப்பை ஏற்பாடு செய்திருந்தனர். உடன் 40 கலைஞர்கள் பங்கேற்று கொண்டு நிகழ்ச்சியை வழங்கினார்கள். இவர்கள் அத்தனை பேரும் கணிணித் துறையில் மென்பொருள் வல்லுனர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
முதல் முதலாக கைகோர்த்த திருக்குறளும் பறையும்
அடுத்து கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஏனைய இந்திய மொழிகளிலும் பறையிசையுடன் திருக்குறள் நடனமும் அமெரிக்காவில் தொடரும் என நம்பலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பறையிசையை அறிந்திராத அமெரிக்காவில், தற்போது எட்டுத் திக்கும் ஒலிக்கச் செய்ததில் அமெரிக்க நிகர்கலைக் கழகத்தின் பறையிசைக் குழுவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
-இர தினகர் tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக