
விசாரித்த, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மூவரும், 1970 முதல், 1992ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்ததாகவும், வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்திய குடிமக்கள் சட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், இந்தியாவில் பிறந்த திபெத்திய வம்சாவளியினரும், இந்திய குடிமக்களே. அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் அளிக்க, மறுக்க முடியாது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் நாட்டை பார்க்காமல், பிறப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். மனுதாரர்கள் மூவரும், பிறப்பினால், இந்திய குடிமக்கள். எனவே, நான்கு வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக