புதன், 25 செப்டம்பர், 2013

அரசியல்வாதிகளை காப்பாற்றும் சட்டம் Express வேகத்தில் வருகிறது ! எல்லகட்சிகளும் OK வாம்

புதுடெல்லி : குற்ற வழக்கில் சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்களின் இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திருத்த மசோதா, சமீபத்தில் முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் தாக் கல் செய்யப்பட்டது. ஆனால், பல தடைகள் காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ரசீத் மசூத் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கும் என தெரிகிறது. அப்படி தண்டனை அறிவிக்கப்பட்டால் முதலாவதாக பதவி விலகும் எம்பியாக ரசீத் மசூத் இருப்பார். இதேபோல் மாட்டுத்தீவன ஊழல் குறித்த சிபிஐ வழக்கில் லாலு பிரசாத்துக்கு தண்டனை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவசர சட்டம் கொண்டு வந்து இதை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனால் இன்னும் ஓரிரு நாளில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா வுக்கு எதிர்கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்ததால், இந்த அவசரம் சட்டத்துக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் எதிர்ப்பு இருக்காது என கூறப்படுகிற
பதவியை உடனடியாக பறிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. குற்ற வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை: